தமிழ்நாடு:



  • விருதுநகர் அருகே காரியாபட்டி கல்குவாரியில் நிகழ்ந்த வெடி விபத்தில் விதிமீறல் கண்டுபிடிப்பு - குவாரி நிர்வாகம் ரூ.12 லட்சம் நிதியுதவி வழங்கியது

  • இணையவழி சூதாட்டத்தை விளம்பரப்படுத்துவர்களுக்கு ஓராண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

  • உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் கால்நடைகளுக்கு தண்ணீர் தொட்டிகள் அமைக்க பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல் 

  • சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் கோயில் திருவிழாவில் இருதரப்பினரிடையே மோதல் - வாகனங்களுக்கு தீ வைப்பு

  • தஞ்சாவூர் பெரிய கோயில் குறித்து அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை பாயும் - இந்து சமய அறநிலையத்துறை எச்சரிக்கை

  • தமிழ்நாட்டில் 15 இடங்களில் சதமடித்த வெயில் - சில இடங்கள் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி 

  • சென்னை - திருவண்ணாமலை இடையே மெமு ரயில் இயக்கம் தொடங்கியது

  • தமிழ்நாட்டில் மே 6 ஆம் தேதி வரை வெப்ப அலை வீச வாய்ப்பு - பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வேண்டுகோள் 

  • வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஓட்டினால் அபராதம் விதிக்கும் முறை அமலுக்கு வந்தது - வாகனங்கள் தீவிர கண்காணிப்பு 

  • சென்னை மெட்ரோ ரயிலில் ஏப்ரம் மாதம் மட்டும் சுமார் 80.87 லட்சம் பேர் பயணம் செய்ததாக அறிவிப்பு 

  • வார இறுதி மற்றும் முகூர்த்த நாளை முன்னிட்டு இன்று சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கம் 

  • தமிழ்நாட்டில் பாஜக தலைமையை மாற்ற வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கருத்து 

  • இளைஞர்களிடையே பெருகிய போதை கலாச்சாரத்துக்கு பாஜக தான் காரணம் - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை

  • புராதான சின்னங்களை பாதுகாப்பது தொல்லியல் துறையின் கடமையாகும் - சென்னை உயர்நீதிமன்றம் கருத்து 

  • நீலகிரியில் வரலாறு காணாத வெப்பம் - கோடை விழாவை ரத்து செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை 

  • கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை இடையே விரைவில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கப்பட உள்ளதாக தகவல்


இந்தியா: 



  • 97.76 சதவிகித ரூ.2 ஆயிரம் நோட்டுகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டு விட்டதாக ரிசர்வ் வங்கி தகவல் 

  • தலித், பிற்படுத்தப்பட்டோர் இல்லாத நாட்டை தான் பாஜக விரும்புவதாக மமதா பானர்ஜி விமர்சனம் 

  • மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்தபோஸ் மீது பாலியல் புகார் - பெரும் பரபரப்பு

  • ஆந்திராவில் ரூ.2 ஆயிரம் கோடி பணத்துடன் பிடிபட்ட கண்டெய்னர் லாரிகள் - ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு அனுப்பி வைப்பு

  • டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம் ஆத்மி சார்பில் கையெழுத்து இயக்கம் தொடக்கம்

  • ஒடிசா சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த முதலமைச்சர் நவீன் பட்நாயக்

  • கொரோனாவுக்கான கோவாக்ஸின் தடுப்பூசி பாதுகாப்பானது தான் - பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு

  • மனீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு வழக்கு - டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

  • தனியார்மயமாக்கல் மூலமாக தாழ்த்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டை மத்திய அரசு பறிப்பதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு

  • காங்கிரஸ் கட்சி பலவீனமானதால் பாகிஸ்தான் அழுவதாக பிரதமர் மோடி கருத்து

  • பாலியல் புகாரில் சிக்கியுள்ள எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு


உலகம்: 



  • சீனாவில் நிலச்சரிவுக்கு பலியானோர் எண்ணிக்கை 48 ஆக உயர்வு - மீட்பு பணிகள் தீவிரம்

  • துபாயில் மீண்டும் கனமழை - பிற நாடுகளுக்கு செல்லக்கூடிய 15 விமானங்கள் ரத்து

  • விண்வெளியில் 14 கோடி மைல்களுக்கு அப்பால் இருந்து சிக்னல் வந்ததாக நாசா தகவல் 

  • எரிமலை வெடிப்பு காரணமாக இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையம் மூடல் 

  • இஸ்ரேல் உடனான உறவை முறித்துக் கொள்வதாக கொலம்பியா அறிவிப்பு


விளையாட்டு: 



  • ஐபிஎல் போட்டி: கடைசி பந்து வரை போராடிய ராஜஸ்தான் அணி ; 1 ரன் வித்தியாசத்தில் ஹைதராபாத் வெற்றி

  • ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதல்