தமிழ்நாடு:



  • உலக மகளிர் தினம் இன்று கொண்டாட்டம் - முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து 

  • புதுச்சேரியில் பாலியல் வன்புணர்வு முயற்சியில் கொல்லப்பட்ட சிறுமி உடல் நல்லடக்கம் - கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய மக்கள்

  • அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மார்ச் 25 ஆம் தேதி முதல் நீட் பயிற்சி - பள்ளிக்கல்வித்துறை திட்டம் 

  • புதுச்சேரியில் சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் - நீதி வேண்டி இன்று ஒருநாள் பந்த் அறிவிப்பு
      

  • மக்களவை தேர்தலுக்கான திமுக விருப்பமனு பெறும் அவகாசம் நிறைவு - மார்ச் 10 ஆம் தேதி முதல் நேர்காணல் நடைபெறுகிறது 

  • உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் இலக்கியவாதி பாஸ்டினா சூசைராஜுக்கு அவ்வையார் விருது அறிவிப்பு 

  • தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான அணி அறிவிப்பு - மகளிர் தலைமையிலான அணியை அறிவித்தார் விஜய்

  • நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்தவர்களுக்கு மார்ச் 10,11 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடைபெறும் - அதிமுக அறிவிப்பு 

  • கல்வெட்டுகளை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? - தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

  • தமிழ்நாட்டை வஞ்சிக்காத மதிக்கும்  அரசு மத்தியில் தேவை - கொளத்தூர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு 

  • பம்பரம் சின்னம் கேட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கு - 2 வாரத்தில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 

  • பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நடப்பாண்டில் 5வது முறையாக தமிழ்நாடு வருகை தருகிறார் பிரதமர் மோடி 

  • சிவராத்திரி, வார விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் 


இந்தியா: 



  • மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அரசு முடிவு 

  • மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டி 102 வயது மூதாட்டி நடைபயணம் 

  • காங்கிரஸ் கட்சியின் இரண்டாவது தேர்தல் ஆணைய கூட்டம் - டெல்லியில் இன்று நடக்கிறது 

  • தேர்தல் பத்திரம் சமர்பிப்பு விவகாரத்தில் எஸ்பிஐ வங்கி மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு - 11 ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணை 

  • பெங்களூருவில் கடும் குடிநீர் பற்றாக்குறை - பள்ளிகளை மூட அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் 

  • சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து

  • சிலிண்டர் மானியத் திட்டம் ஓராண்டுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் - அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம் 

  • பிரதமர் மோடி குறித்து பொதுவெளியில் பேசும்போது எச்சரிக்கையுடன் பேச ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை 

  • இந்தியாவில் முதல் ஏ.ஐ ரோபோ ஆசிரியை - கேரளாவில் அறிமுகம் செய்யப்பட்டது 


உலகம்: 



  • போருக்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்த வடகொரிய ராணுவத்துக்கு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவு 

  • பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் இருந்து முதல்முறையாக அமைச்சராக தேர்வு செய்யப்பட்ட சர்தார் ரமேஷ் சிங் அரோரா 

  • மெக்ஸிகோவில் ஹெலிகாப்டர் விபத்தில் கடற்படை வீரர்கள் 3 பேர் உயிரிழப்பு

  • இளம்பெண்ணை பணிக்கு அமர்த்தியதில் ஊழல் - பெரு பிரதமர் ஆல்பர்டோ ராஜினாமா 


விளையாட்டு: 



  • இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட்; முதல் இன்னிங்ஸில் 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இங்கிலாந்து

  • இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 135 ரன்களுக்கு எடுத்துள்ளது 

  • 100வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய இந்திய வீரர் அஸ்வின் - சிறப்பு பரிசு வழங்கி கௌரவிப்பு 

  • அகில இந்திய பீச் வாலிபால் போட்டி - சென்னையில் இன்று தொடக்கம் 

  • பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் - பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்