தமிழ்நாடு: 



  • எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 2 படகுகளுடன் ராமநாதபுரத்தை சேர்ந்த 19 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

  • 10 நாள் ஸ்பெயின் பயணம் முடிந்து சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; ரூ.3440 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்து

  • ஊட்டியில் பங்களா கட்டுமான பணியின்போது மண் சரிவு ஏற்பட்டு 6 பெண் தொழிலாளர்கள் உயிரிழப்பு - கட்டிட உரிமையாளர் உட்பட 4 பேர் கைது

  • நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க பிரேமலதாவுக்கு அதிகாரம்; தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

  • இதுவரை எந்த கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை 14 எம்.பி.சீட், 1 ராஜ்யசபா சீட் தருபவர்களுடன் மட்டுமே கூட்டணி - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

  • ஸ்பெயின் நாட்டு பயணம் வெற்றிபோல் தேர்தல் களத்தில் ‘இந்தியா’வின் வெற்றியும் அமையும்: திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

  • ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு செய்யாதவர்களின் பெயர்கள் நீக்கப்படாது - தமிழ்நாடு அரசு விளக்கம்

  • TANCET, CEETA தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 12ம் தேதி வரை அவகாசத்தை நீட்டியுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்

  • சென்னை ஆழ்வார்பேட்டையில் புதிதாக கட்டப்பட்டு வரும் எம்.ஜி.எம் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு இடைக்கால தடை விதித்தது உயர்நீதிமன்றம்


இந்தியா:



  • உத்தரகாண்ட் சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடரில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்; சுதந்திரத்திற்கு பிறகு முதல் முறையாக அமலாகிறது.

  • டெல்லியில் ஜே.பி.நட்டா முன்னிலையில் அதிமுகவின் 16 முன்னாள் எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்

  • மக்களவை தேர்தலுக்கு முன்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி கடைசி உரை: காங்கிரஸ் மீது கடும் தாக்கு

  • சரத்பவார் அணிக்கு தேசியவாத காங்கிரஸ்-சரத்சந்திர பவார் என்ற புதிய பெயரை வைக்க தேர்தல் ஆணையம் அனுமதி

  • டெல்லியில் பிரதமர் மோடி உடன் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் சந்திப்பு

  • இந்தியாவில் செல்போன் உற்பத்தி கடந்த 10 ஆண்டுகளில் ஆயிரத்து 700 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

  • சம்மனுக்கு ஆஜராகவில்லை எனக் கூறி, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை முறையிட்டுள்ளது.

  • ஜார்க்கண்ட் சத்ரா மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் காவல்துறை அதிகாரிகள் இருவர் வீர மரணம் அடைந்துள்ளனர்.


உலகம்:



  • வன்முறை, பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.

  • அண்டார்டிகாவில் ஆராய்ச்சி பணிகள்: நவீன மையத்தை நிறுவியது சீனா.

  • பலூசிஸ்தானில் அடுத்தடுத்து வெடித்த குண்டுகள்; 26 பேர் இதுவரை உயிரிழப்பு.

  • பிலிப்பைன்சில் கடும் நிலச்சரிவு - 5 பேர் உயிரிழப்பு

  • அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்; ஒரு மாணவர் மரணம்


விளையாட்டு:



  • அண்டர் 19 உலகக் கோப்பை: 2வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்.

  • சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள ரஞ்சி கோப்பை போட்டியை காண பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம்.

  • மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் நம்பர் 1: ஐசிசி தரவரிசையில் பும்ரா உலக சாதனை

  • 1000 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இரண்டாவது அணி என்ற பெருமையை ஆஸ்திரேலியா பெற்றுள்ளது.

  • மறைந்த செஸ் வீரர் மிர் சுல்தான் கான் பாகிஸ்தானின் முதல் கிராண்ட்மாஸ்டர் என்ற பட்டத்தை வென்றுள்ளார்.