தமிழ்நாடு:



  • தமிழ்நாட்டில் 34 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி

  • வளர்ச்சியில் தமிழ்நாடு பின்னோக்கி செல்வதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு 

  • மெரினாவில் கருணாநிதி நினைவிடம் இன்று திறப்பு - புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடத்தையும் திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் 

  • நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பொறுமையாக முடிவெடுப்போம் என சமக தலைவர் சரத்குமார் பேச்சு

  • டாஸ்மாக் கடைகளை மூடுவதை விட குடிப்பழக்கம் இருப்பவர்களை மீட்பதே முக்கியம் - அமைச்சர் முத்துசாமி பேச்சு 

  • பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பிப்ரவரி 27 ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம் 

  • நீலகிரியில் மகளிருக்கான இலவச பேருந்து திட்டம் தொடக்கம் - இன்று முதல் 99 பேருந்துகள் இயக்கம் 

  • தென் தமிழக கடலோரங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு  - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் 

  • விஜயதரணியின் ராஜினாமா கடிதத்தை ஏற்பதாக தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு 

  • மார்ச் 1 ஆம் தேதி அதிமுக பேச்சாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என தலைமைக்கழகம் அறிவிப்பு 

  • சென்னை முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தபடி தூத்துக்குடி மின்வாகன மின் உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

  • மழை, வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு இதுவரை ஒரு ரூபாய் கூட நிதி வழங்கவில்லை என தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

  • சென்னை பள்ளிக்கரணையில் சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞர் கொலை - 5 பேர் கைது 

  • தென்காசி அருகே தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து - துரிதமாக செயல்பட்டு ரயில் விபத்தை தவிர்த்த தம்பதிகள் 


இந்தியா:



  • ராஜஸ்தானில் இந்தியா - ஜப்பான் இடையே கூட்டுப்போர் பயிற்சி - 40 பேர் அடங்கிய குழு இந்தியா வருகை 

  • 5 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளை திறந்து வைத்த பிரதமர் மோடி - இந்தியா மிக வேகமாக வளர்வதாக பேச்சு

  • உத்தரப்பிரதேசத்தில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 7 பேர் உயிரிழப்பு 

  • கடலுக்கு அடியில் நீரில் மூழ்கிய துவாரகா நகரை பார்வையிட்ட பிரதமர் மோடி - தெய்வீகமான அனுபவம் என உருக்கம் 

  • பிரதமர் மோடி சொன்னதைப் போல 370 தொகுதிகளில் எல்லாம் பாஜக வெற்றி பெறாது - பிரஷாந்த் கிஷோர் கணிப்பு

  • இந்திய நாட்டில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு 

  • ஜம்மு காஷ்மீரில் ஓட்டுநர் இல்லாமல் 70 கி.மீ. தூரம் ஓடிய சரக்கு ரயில் - பொதுமக்கள் அதிர்ச்சி 

  • 2026 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை தொடங்கும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதி 


உலகம்:



  • 2 ஆண்டுகளை நிறைவு செய்த ரஷ்யா - உக்ரைன் போர் ; இதுவரை 31 ஆயிரம் உக்ரைன் வீரர்கள் உயிரிழப்பு என அதிபர் ஜெலன்ஸ்கி தகவல் 

  • அமெரிக்காவில் கூகுள் பே சேவை ஜூன் மாதம் முதல் நிறுத்தப்படும் என அறிவிப்பு 

  • ஆப்பிள் ஐபேடை மைக்ரோவேவ் ஓவனில் வைத்து சூடுபடுத்திய பெண் 


விளையாட்டு:



  • மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் குஜராத்தை வீழ்த்தி மும்பை அபார வெற்றி

  • ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியில் சௌராஷ்ட்ராவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய தமிழ்நாடு 

  • ப்ரோ கபடி லீக் தொடரின் பிளே ஆஃப் சுற்று போட்டிகள் இன்று முதல் தொடக்கம் 

  • நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி ஆஸ்திரேலியா அசத்தல்

  • செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடரில் பஞ்சாப் அணியை வீழ்த்தி சென்னை அணி வெற்றி