தமிழ்நாடு:



  • அதீத கனமழையால் தத்தளிக்கும் தென் மாவட்டங்கள் - எங்கு பார்த்தாலும் வெள்ளம் சூழ்ந்திருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு 

  • கனமழை மற்றும் வெள்ளம் பாதிப்பால் திருநெல்வேலி, தூத்துக்குடியில் இன்று பொதுவிடுமுறை அறிவிப்பு - தென்காசி, குமரியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 

  • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் போர்க்கால அடிப்படையில் நடைபெறும் மீட்பு பணிகள் - ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மக்கள் மீட்பு, உணவுப் பொருட்கள் விநியோகம் 

  • அதீத கனமழை, வெள்ளம் காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பல ரயில்கள் பகுதி அடிப்படையில் இயக்கம் - சில ரயில்கள் ரத்து 

  • வெள்ளம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதால் தென்மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகள் சேவை நிறுத்தம் - பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு 

  • தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பு மீட்பு பணிகளை துரிதப்படுத்த 9 அமைச்சர்களை நியமித்தது தமிழ்நாடு அரசு 

  • சென்னையில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட அனுபவத்தை கொண்டு தென்மாவட்ட மக்களை மீட்போம் என கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு 

  • தென்மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்பு - நிலைமை சீரடைய பிரார்த்தனை செய்வதாக ஆளுநர் ஆர்.என்.ரவி எக்ஸ் தளத்தில் பதிவு 

  • கனமழை பாதிப்பு எதிரொலியாக சேலம் திமுக இளைஞரணி மாநாடு மீண்டும் ஒத்திவைப்பு

  • மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக பெய்த மழை - வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கால் மக்களுக்கு எச்சரிக்கை 

  • கனமழையால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அரசு அறிவிப்பு

  • புயல், மழை வெள்ள பாதிப்பு தொடர்பான நிவாரண நிதி வழங்கக்கோரி பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் 

  • நெல்லை, தூத்துக்குடியில் 24 மணி நேரத்தில் 660 செ..மீ., மழை பெய்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் 

  • திருநெல்வேலி, திருச்செந்தூர் செல்லும் இடங்களில் உள்ள ரயில் தண்டவாளங்களில் மண் அரிப்பு - ரயில் சேவை பாதிப்பு 

  • ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்ததால் தவிர்க்க முடியாத சூழல் தென்மாவட்டங்களில் ஏற்பட்டதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல் 

  • கனமழை வெள்ளத்தால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கிராமங்கள் துண்டிப்பு - 2 நாட்களாக மின்சாரம் இல்லாததால் மக்கள் அவதி 


இந்தியா:



  • கர்நாடகாவில் புதிய வகை கொரோனா பரவுவதாக தகவல் - 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

  • நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போர்க்கொடி - குளிர்கால கூட்டத்தொடர் முழுக்க 92 எம்.பி.,க்கள் இடைநீக்கம் 

  • நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் முன்பே திட்டமிட்டப்பட்டதாக மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி குற்றச்சாட்டு 

  • டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் 

  • காங்கிரஸ் கட்சி தொடங்கி 138 ஆண்டுகள் நிறைவு - முதல்முறையாக தொண்டர்களிடம் நிதி வசூல் 

  • டெல்லி மெட்ரோ கதவில் சிக்கிய சேலை - தண்டவாளத்தில் விழுந்த பெண் உயிரிழப்பு 


உலகம்: 



  • சீனாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 86 பேர் உயிரிழப்பு

  • அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் பாதுகாப்பு வாகனம் மீது மோதிய காரால் பரபரப்பு - டிரைவர் கைது 

  • தாவூத் இப்ராகிம் கராச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் - விஷம் கொடுக்கப்பட்டதாக தகவல் 


விளையாட்டு:



  • இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது 

  • ஐபிஎல் 2024 தொடருக்கான வீரர்கள் ஏலம் - துபாயில் இன்று நடைபெறுகிறது 

  • ஒருநாள் போட்டித்தொடரில் ஜிம்பாப்வே அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி அயர்லாந்து அணி அபார வெற்றி