Car Accident: கர்நாடகா அருகே சோகம்.. நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதல் .. 12 பேர் உயிரிழப்பு..

ஆந்திராவில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற டாடா சுமோ வாகனம் லாரி மீது மோதிய விபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

ஆந்திராவில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற டாடா சுமோ வாகனம் லாரி மீது மோதிய விபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

கர்நாடகா மாநிலம் சிக்கபல்லபூர் நகரின்  உள்ள போக்குவரத்து காவல் நிலையம் அருகே இன்று காலை கான்கிரீட் ரெடி மிக்ஸ்  லாரி நின்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக சென்ற டாடா சுமோ வாகனம் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 3 பேர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பனி மூட்டம் காரணமாக இந்த விபட்ய்ஹ்த்

இதுதொடர்பாக தெரிவித்துள்ள பாகேபள்ளி போக்குவரத்து காவல்துறையினர், ‘பயணம் செய்தவர்கள் வாகனத்தின் பதிவு எண்ணை கொண்டு  ஆந்திராவில் இருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டிருக்கலாம்’ என தெரிவித்துள்ளனர். எனினும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் விபத்தில் பலரின் முகம் அடையாளம் காண முடியாதபடி உள்ளதால் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் விபத்தில் சிக்கியவர்கள் யார் யார் என்ற அடையாளம் காணும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க: Kangana Ranaut: "மனதை உலுக்குகிறது" : இஸ்ரேலை ஆதரிக்கும் கங்கனா ரனாவத்

Continues below advertisement
Sponsored Links by Taboola