கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சகாயம் ஐஏஎஸ்க்கு தீவிர சிகிச்சை

மருத்துவர்கள் தனிக்குழு அமைத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது

Continues below advertisement

கொரோனா நோய்த் தொற்று காரணமாக மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தின் ரத்த அழுத்தம் தொடர்ந்து  குறைந்து வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Continues below advertisement

சகாயம் கடந்த ஜனவரி மாதம் அரசுப் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். மேலும், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில்அரசியல் பேரவை என்ற அமைப்பின் மூலம் நேரடி அரசியலில் இறங்கினார். சகாயம்  அரசியல் பேரவை சார்பாக 20 தொகுதிகளில் போட்டியிட இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. வேட்பாளருக்கு ஆதாரவாக சகாயம் தீவிர அரசியல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார். 

இதற்கிடையே, கடந்த ஏப்ரல் 4ம் தேதி சகாயத்துக்கு கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவர்  சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்நிலையில், சகாயத்தின் ரத்த அழுத்தும் தொடர்ந்து குறைந்து கொண்டு வருவதாகவும், அவருக்கு தீவிர சகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மருத்துவர்கள் தனிக்குழு அமைத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

2014ம் ஆண்டு கருங்கல் (கிரானைட்) மற்றும் கனிம மணற் கொள்ளை பற்றி விசாரிக்க இவர் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது .  லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து என்பது இவரது அடிப்படை கொள்கையாக இருந்தது.    

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 6, 000க்கும் அதிகமானோருக்கு நோய்த் தொற்று புதிதாக கண்டறியப்பட்டது.      

Continues below advertisement
Sponsored Links by Taboola