கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் கடந்தாண்டு கடுமையான பாதிப்பை சந்தித்தது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பாலும், ஊரடங்காலும் மக்கள் கடுமையான நெருக்கடிகளை சந்தித்தனர். பின்னர், கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு ஊரடங்கும் படிப்படியாக தளர்த்தப்பட்டது. இந்த சூழலில், தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில் மீண்டும் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி நாளை முதல்-அமைச்சர்களுடன் கொரோனா பாதிப்பு குறித்து முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.