கோவை விமான நிலையம் அருகே உள்ள தனியார் அரங்கில் பசுமை தாயகம் அமைப்பு சார்பில் நொய்யல் ஆற்றை மீட்போம் என்ற கலந்துறையாடல் கூட்டம்,  அவ்வமைப்பின் தலைவர் செளமியா அன்புமணி தலைமையில் நடைபெற்றது. இதில் தொழில் துறையினர், விவசாயிகள், சமுக ஆர்வலர்கள் உள்ளிட்டோர்ட் கலந்து கொண்டனர். இதில் நொய்யலை மீட்டு எடுப்பது குறித்து அனைத்து தரப்பினரின் கருத்துக்களைக் கேட்டு ஒரு முழுமையான நொய்யல் மீட்பு அறிக்கை தயாரிக்கபடவுள்ளது.


இதற்கு முன்னதாக கூட்டத்தில் உரையாற்றிய செளமியா அன்புமணி, நாடு முழுவதும் உள்ள நீர் நிலைகள் பாதுகாப்பு குறித்து பசுமை தாயகம் அமைப்பு குரல் கொடுத்து வருகிறது என்றார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்ற உருப்பினராக இருந்து நீர் நிலைகள், சுற்று சூழல் பாதிப்பிற்கும் விவசாயிகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்ததையும், அதற்கான திட்டங்களை துவக்கி வைத்தவற்றை பட்டியலிட்டார். மருத்துவர் ராமதாஸ் விவசாயத்திற்கும், சுற்றுசூழலை காக்கும் விதமாக பசுமை தாயகம் அமைப்பினை தொடங்கி தொடர்ந்து பயணித்து வருகிறார். தற்போது நொய்யலை மீட்க அனைவரும் ஒன்று கூடியுள்ளோம். அனைவருடனும் சேர்ந்து தொடர்ந்து பயணித்து நொய்யலை மீட்போம் என்ற உறுதியேற்போம் எனத் தெரிவித்தார்.




இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செளமியா அன்புமணி, ”கொங்கும் செழித்தால் எங்கும் செழிக்கும் என்ற  பழமொழி இருக்கிறது. அதனால் நொய்யல் செழிக்கட்டும், கொங்கு செழிக்கட்டும் என்ற முழக்கத்தை எடுத்துக் கொண்டு கடந்த மாதம் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஒரு கருத்தரங்கம் நடந்தது. இந்த நொய்யல் ஆற்றை மையபடுத்தி உழைத்து கொண்டிருக்கும் அனைத்து நல் உள்ளங்களையும் இணைத்து பசுமை தாயகம் சார்பில் ஒரு கருத்து கேட்பு கூட்டம் நடத்தி இருக்கிறோம். இந்த நொய்யல் ஆற்றை காப்போம், நொய்யல் ஆற்றை மீட்போம். 


நொய்யல் ஆற்றை எவ்வாறு எல்லாம் சுத்தபடுத்தலாம் என்ற நோகத்தில் நடத்தபட்ட இந்த்கூட்டத்தில் நிறைய பேர் கலந்து கொண்டு நிறைய கருத்துகளை எடுத்து வைத்துள்ளார்கள். மாவட்ட வாரியகாவோ அல்லது தாலுக்கா வராரியாகோ, தொழில்நுட்ப வாரியாகவோ ஒரு ஒற்றுமையான ஒரு கூட்டமைப்பை உருவாக்க வேண்டும். குறைந்தபட்ச செயல்திட்டத்தை கொண்டு வர வேண்டும்.  முதல் கட்டம், இரண்டாம்கட்டம், மூன்றாம் கட்டம் என பல விஷங்களை எடுத்து கொண்டு செல்ல வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம். பத்து லட்சம் கையெழுத்துடன் ஒரு கையெழுத்து இயக்கத்தை நடத்தலாம் என்ற முடிவு செய்யபட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்ற குறைந்த்பட்ச திட்டத்தம் குறித்தும் பேசிக்கொண்டிருக்கிறோம்.




இதை தொடர்ந்து முன்னெடுத்து கொண்டு செல்ல வேண்டும். மாட்ட ஆட்சியர், அமைச்சர்கள், முதலமைச்சர்களை பார்க்க வேண்டும். பிரதமரை கூட பார்க்க வேண்டும் என கூட கருத்துகள் கேட்கப்பட்டது. அனைத்து அமைப்புகளும் ஒறறுமையாக வந்து இந்த ஒரு விஷயத்தை தான் பேசினோம். எத்தனையோ எதிர்மறை கருத்துகள், இருந்தாலும் அதையும் இன்று காது கொடுத்து கேட்டார்கள். விவசாயம், தொழில் செய்பர்கள, நகரவாசிகள், கிராமத்தில் இருப்பவர்கள் யாரையும் ஒதுக்காமல் அனைவரும் உள்ளடக்கிய திட்டம் வேண்டும். மாதம் ஒரு கூடி என்னென்ன செய்யலாம் என பேசலாம் என யோசித்து வைத்துள்ளோம்.


அரசியல் கட்சிகளில் யாருக்கெல்லாம் விருப்பம் இருக்கிறதோ அவர்களெல்லாம் ஒன்றிணைந்து வருவார்கள். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட தான் முயற்சி செய்து வருகிறோம். இன்று சமூக அமைப்புகள் மட்டும் தான் ஒன்றிணைந்திருக்கறோம் விரைவில் அரசியல் கட்சிகளை சந்திப்போம். நாங்கள் எந்த விஷயத்தை எடுத்தால் நல்ல முறையில் முடித்து காட்டுவோம் என்பதற்பாக இந்த கூட்டத்தை கூட்டி இருக்கிறோம். கையழுத்து இயக்கம் உத்தேசமாக மார்ச் 22 உலக நீர் நாளில் துவங்கும்” எனத் தெரிவித்தார்.