தமிழ்நாட்டில் தொடர்ந்து தினசரி கொரோனா தொற்று பாதிப்புகள் மீண்டும் அதிகரித்து வருகிறது. தினசரி தொற்று பாதிப்பில் சென்னை முதலிடத்தில் நீடித்து வருகிறது. இன்று தினசரி தொற்று பாதிப்பில் செங்கல்பட்டு இரண்டாவது இடத்திலும், திருவள்ளூர் மூன்றாவது இடத்திலும் உள்ள நிலையில், கோவை நான்காவது இடத்தில் உள்ளது.


கோவையில் கடந்த சில வாரங்களாக தினசரி கொரோனா தொற்று பாதிப்புகள் ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்றைய தினத்தை விட இன்று 28 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது. கோவையில் இன்று 156 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 33 ஆயிரத்து 14 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 890 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.


இன்று கொரோனா தொற்றில் இருந்து 126 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 29 ஆயிரத்து 507 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்றும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2617 ஆக உள்ளது.


ஈரோடு, திருப்பூர், நீலகிரி நிலவரம்


ஈரோடு மாவட்டத்தில் இன்று 30 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினத்தை விட இன்று 14 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 255 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று கொரோனா தொற்றில் இருந்து 43 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். கொரோனா தொற்று பாதிப்பால் இன்றும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. அதேசமயம் ஈரோடு மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்புகள் 133295 ஆக உள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 132306 ஆகவும், மொத்த உயிரிழப்புகள் 734 ஆகவும் உள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில் இன்று 28 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினத்தை விட இன்று 6 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 168 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று கொரோனா தொற்றில் இருந்து 23 பேர் குணமடைந்துள்ளனர் . கொரோனா தொற்று பாதிப்பால் இன்றும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. இதுவரை திருப்பூரின் மொத்த கொரோனா பாதிப்புகள் 130373 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 129153 ஆகவும் உள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1052 ஆக உள்ளது.


நீலகிரி மாவட்டத்தில் இன்று 8 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினத்தை விட இன்று 5 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 74 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று கொரோனா தொற்றில் இருந்து 9 பேர் குணமடைந்துள்ளார். கொரோனா தொற்று பாதிப்பால் இன்றும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. அதேசமயம் நீலகிரி மாவட்டத்தின் மொத்த பாதிப்புகள் 42414 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 42114 ஆகவும் உள்ளது. மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 226 ஆக உள்ளது.