கோவையில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் கூடுதலாக தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வருவதன் காரணமாக, தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. கோவை மாவட்டத்தில் தொடர்ந்து இறங்கு முகத்தில் இருந்த கொரோனா தொற்று பாதிப்புகள், கடந்த வாரத்தில் திடீரென ஏறுமுகத்திற்கு சென்றது. இதனால் கோவையில் ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. கடந்த 3 நாட்களாக தொற்று பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில், இன்று மீண்டும் பாதிப்புகள் மீண்டும் அதிகரித்துள்ளது. கோவையில் நேற்றைய தினத்தை விட இன்று 18 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது.


கோவையில் இன்று 226 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 30 ஆயிரத்து 241 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 2085 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 184 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால்  குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 25 ஆயிரத்து 971 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்று 3 பேர் உயிரிழந்தனர். கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2185 ஆக உள்ளது. கோவையில் கொரோனா தொற்று விகிதம் 1.9 ஆக குறைந்துள்ளது.


ஈரோடு,  திருப்பூர், நீலகிரி நிலவரம்


ஈரோட்டில் இன்று 154 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 27 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. 132 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்னர். மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 1625 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் இன்று 2 பேர் உயிரிழந்தனர். ஈரோடு மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்புகள் 94364 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 92103 ஆகவும், மொத்த உயிரிழப்புகள் 636 ஆக உள்ளது. ஈரோட்டில் தொற்று விகிதம் 2.4 ஆக அதிகரித்துள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில் இன்று 92 பேருக்கு இன்று கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 7 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது. 106 பேர் குணமடைந்துள்ள நிலையில், 873 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் இன்று ஒருவர் உயிரிழந்தார். திருப்பூரின் மொத்த கொரோனா பாதிப்புகள் 88161 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 86441 ஆகவும் அதிகரித்துள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை 847 ஆகவும் உள்ளது. திருப்பூரில் கொரோனா தொற்று விகிதம் 1.7 சதவீதமாக உள்ளது.


நீலகிரி மாவட்டத்தில் இன்று 51 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 11 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. 61 பேர் குணமடைந்துள்ள நிலையில், 503 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தொற்று பாதிப்பால் இன்று ஒருவர் உயிரிழந்தார். நீலகிரி மாவட்டத்தின் மொத்த பாதிப்புகள் 30708 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30024 ஆகவும் உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 181 ஆக உள்ளது. நீலகிரியில் கொரோனா தொற்று விகிதம் 1.6 ஆக உள்ளது.


கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில், தொற்று பாதிப்புகள் மீண்டும் அதிகரித்து வருவது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.