Coimbatore Power Shutdown: கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (21.06.2025) மின்சார வழித்தடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4  மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. 

மாதாந்திர மின் பராமரிப்பு பணி 

தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. கோவை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.  மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.

எந்த நேரத்தில் மின் நிறுத்தம்?

பராமரிப்பு பணிக்காக வழக்கமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அறிவிக்கப்பட்ட  இடங்களில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 மணி அல்லது 10 மணியிலிருந்து மாலை 4 அல்லது 5 மணிவரை,  மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். 

மின் தடைப்பகுதிகள்:

கோயம்புத்தூர் நகரம்

மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. 

மேட்டுப்பாளையம் சாலை, அழகேசன் சாலை (ஒரு பகுதி), நாராயணகுரு சாலை, சாய்பாபா காலனி, அவினாசிலிங்கம் கல்லூரி, வனக் கல்லூரி, முருகன் மில்ஸ், என்.எஸ்.ஆர் சாலை (ஒரு பகுதி), பாரதி பூங்கா, ராஜா அண்ணாமலை சாலை, சென்ட்ரல் திரையரங்கம், திவாண் பஹதூர் சாலை (ஒரு பகுதி), பூ மார்க்கெட், பட்டேல் சாலை, காளீஸ்வரா நகர், செல்லப்ப கவுண்டர் சாலை, சி.எஸ்.டபுள்யூ மில்ஸ், ரங்கே கவுடர் சாலை, சுக்கிரவார்பேட்டை, மரக்கடை,தெப்பக்குள மைதானம்,ராம்நகர், அவிநாசி சாலை, காந்திபுரம் பேருந்து நிலையம், கிராஸ்கட் சாலை, சித்தாபுதூர், பாலசுந் தரம் சாலை, புதியவர் நகர் (ஒரு பகுதி), ஆவாரம்பாளையம் (ஒரு பகுதி), டாடாபாத், அழகப்ப செட்டியார் சாலை, 100 அடி சாலை, சிவானந்தா காலனி, ஹட்க்கோ காலனி, அலமு நகர்.

சூலூர் 

சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவத்தூர்

மேட்டுப்பாளையம் 

மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆலங்கொம்பு, ஜடையம்பாளையம், தேரம்பாளையம்

அன்னூர் 

அன்னூர், படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம்

பொதுமக்கள் கவனத்திற்கு:

நாளை(21.06.25) மின் தடை செய்யப்படவுள்ளதால் பொதுமக்கள் வீட்டு தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்புதல் மற்றும் அத்தியாவசிய தேவை சார்ந்த அனைத்து வேலைகளையும் முன்பே செய்து வைத்துக்கொள்ளுமாறு  அறிவுறுத்தப்படுகின்றனர்.