கோவை மாவட்டத்தில் சீரான மின் விநியோகத்தை உறுதிப்படுத்தும் வகையில் மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதிகளில் அறிவிக்கப்பட்ட மின் தடையானது மாதந்தோறும் செய்ய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை(05-02-2026) எங்கெல்லாம், மின் தடை ஏற்பட போகிறது காணலாம்.

Continues below advertisement

மாதாந்திர பராமரிப்புப் பணிகள்

தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் எந்த பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்பதை TANGEDCO வலைதளத்தில் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்:

செங்கத்துரை

Continues below advertisement

செங்கதுரை, காடன்பாடி, ஏரோ நகர், மதியழகன் நகர்

சரவணம்பட்டி

சரவணம்பட்டி, அம்மன்கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவனந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமண்டம்பாளையம், ஜிஎன்மில், சுப்ரமணியம்பாளையம், கேஎன்ஜிபுதூர், மணியகரம்பாளையம், லட்சுமிநகர், நாச்சிமுத்துநகர்

கூடுதல் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறிப்புகள்

  • மின் சாதனங்களை அணைத்தல்: மின்சாரம் மீண்டும் வரும்போது ஏற்படும் திடீர் மின்னழுத்த ஏற்றத்தைத் (Voltage Fluctuations) தவிர்க்க, டிவி, ஏசி, மற்றும் கணினி போன்ற சாதனங்களின் சுவிட்சுகளை அணைத்து வைப்பது நல்லது.

  • குளிர்சாதனப் பெட்டி (Fridge): பிரிட்ஜில் உள்ள பொருட்கள் நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் இருக்க, மின்சாரம் இல்லாத நேரத்தில் அதன் கதவுகளை அடிக்கடி திறப்பதைத் தவிர்க்கவும்.

  • வெளிச்சத்திற்கான ஏற்பாடு: மெழுகுவர்த்திகளுக்குப் பதிலாக எல்.இ.டி (LED) விளக்குகள் அல்லது சார்ஜ் செய்யக்கூடிய டார்ச் லைட்டுகளைப் பயன்படுத்துவது தீ விபத்துகளைத் தவிர்க்க உதவும்.

  • நீர் சேமிப்பு: மின்சாரம் தடைபடும் முன் அல்லது நீண்ட நேர மின்தடை எனத் தெரிந்தால், குடிநீர் மற்றும் பயன்பாட்டு நீரைத் தேவையான அளவு சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.