ஐடி நிறு​வனங்​களில் பணி​யாற்​று​பவர்​கள் முதல் கூலி வேலை செய்​பவர்​கள் வரை அனைத்​து தரப்​பினரும் விரும்பி அருந்​தும் பான​மாக டீ, காபி இருந்து வரு​கின்​றன. பலருக்​கும் இவற்றை குடித்​தால்​தான் வேலையே ஓடும் என்​கிற வகை​யில் மக்​களின் உணவு பழக்​கவழக்​கத்​தில் தவிர்க்க முடி​யாத ஒன்​றாக மாறி​யிருக்​கின்​றன. சென்னையில் உள்ள பெரும்​பாலான டீக்​கடைகளில் தற்​போது டீ ரூ.12-க்​கும், காபி ரூ.15-க்​கும் விற்​பனை​யாகி வரு​கிறது. இது தவிர சிறிய அளவி​லான கடைகளில் டீ ரூ.10-க்​கும், காபி ரூ.12-க்​கும் விற்​பனை​யாகிறது.

இந்​நிலை​யில் சென்​னை​யில் பல்​வேறு இடங்​களில் டீயின் விலை அதிரடி​யாக உயர்த்​தப்​பட்​டுள்​ளது. கோயம்​பேடு, அடை​யாறு, மயி​லாப்​பூர், திரு​வான்​மியூர், புரசை​வாக்​கம் உட்பட பல்​வேறு இடங்​களில் உள்ள டீக்​கடைகளின் முகப்​பில் நேற்று டீ, காபி, பூஸ்ட், ஹார்​லிக்ஸ் உள்​ளிட்​ட​வற்​றின் விலை (செப். 1) முதல் உயர்த்​தப்​படு​வ​தாக நோட்​டீஸ் ஒட்​டப்​பட்​டிருந்​தன. அதன்​படி டீயின் விலை ரூ.15 ஆகவும், காபி​யின் விலை ரூ.20 ஆகவும் நிர்​ண​யம் செய்​யப்​பட்​டுள்​ளது.

அதே​போல் லெமன் டீ - 15, பால் - ரூ.15, ஸ்பெஷல் டீ - 20, ராகி​மால்ட், சுக்கு காபி - ரூ.20, ஹார்​லிக்​ஸ், பூஸ்ட் - ரூ.25 ஆகவும் விற்​பனை செய்​யப்பட உள்​ளன. பார்​சல் டீ ரூ.45 ஆகவும், பார்​சல் காபி ரூ.60 ஆகவும், பார்​சல் பூஸ்ட் ரூ.70 ஆகவும் விற்​கப்​படும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. அதே​போல் பஜ்ஜி, போண்​டா, சமோசா ஒன்​றுக்கு ரூ.15 வசூலிக்​கப்பட உள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

சென்னையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு டீ, காபி ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டது. இதில், டீ ரூ.15, காபி ரூ. 20 என உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு டீ, காபி பிரியர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், தற்போது கோயம்புத்தூர் மாவட்டத்திலும் டீ மற்றும் காபியின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதில், சென்னையில் தற்போது டீ, காபி உள்ளிட்டவற்றின் விலை உயர்த்தப்பட்ட பின் என்ன விலை இருக்குமோ, அதே விலை கோவையிலும் இருந்து வந்தது. ஆனால் தற்போது, அந்த விலையும் கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதில், டீ ரூ. 20, காபி ரூ. 26, பிளாக் டீ உள்ளிட்டவை ரூ. 17 என உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு சாலையோர மற்றும் பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் செயல்படும் டீ கடைகளில் உயர்த்தப்பட்டுள்ளது. இதை தவிர்த்து சில முன்னணி பேக்கரிகள், ரெஸ்டாரண்டுகள், அமர்ந்து டீ அருந்தும் கடைகள் உள்ளிட்டவற்றில் 5 சதவீத ஜிஎஸ்டி தொகையுடன் டீ, காபி உள்ளிட்டவற்றின் விலை வசூலிக்கப்படுகிறது. இதே போல, இஞ்சி டீ, பூஸ்ட், கார்லிக்ஸ் உள்ளிட்டவை ரூ. 30- ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேக்கரி சங்கத்தினர்கள் கூறுகையில், டீ, காபி ஆகியவற்றின் தூள்கள், பால், போக்குவரத்து ஆகியற்றின் விலை உயர்வால் டீ, காபி உள்ளிட்டவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். இதே போல பிரபலமான முன்னணி பேக்கரிகளிலும் இதே விலை வசூலிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான விலை அறிவிப்பு பட்டியல் அனைத்து கடைகளிலும் ஒட்டப்பட்டுள்ளன. இதில், சென்னையுடன் ஒப்பிடுகையில் கோயம்புத்தூரில் டீ மற்றும் காபி உள்ளிட்டவற்றின் விலை சற்று அதிகமாகவே உள்ளது. பொதுமக்கள் மத்தியில் அத்தியாவசியமாகவும், புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கக்கூடிய டீ மற்றும் காபி ஆகியவற்றின் விலை உயர்வு பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதே போல, டீ, காபி பிரியர்களும் கடும் அதிர்ச்சியில் உரைந்து போய் உள்ளனர்.