கோவை மாநகரில், காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம், ஊட்டி, மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலம் செல்லும் சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் ரூபாய் 45 கோடியில் மேம்பாலம் கட்டப்பட்டது. இதற்காக உக்கடம் பேருந்து நிலையத்தின் ஒரு பகுதி இடித்து அகற்றப்பட்டது. அருகில் இருந்த பழ மார்க்கெட் அகற்றப்பட்டு, அங்கு மேம்பாலத்தின் இறங்கு தளம் அமைக்கப்பட்டது.

Continues below advertisement

கோவை உக்கடம் புதிய முகம்

மேம்பாலம் கட்டுமான பணிகளால் உக்கடம் பேருந்து நிலையம் குண்டும், குழியுமாக காட்சி அளித்தது. இதை அடுத்து கோவை மாநகராட்சி சார்பில் உக்கடம் பேருந்து நிலையத்தை புணரமைக்கவும், பழ மார்க்கெட் இருந்த இடத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டவும் ரூபாய் 21.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகளை அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்.

Continues below advertisement

இந்த புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவு அடைந்தது. திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது. மேலும் இரவு நேரத்தில் மின்னொளியில் இந்த பேர் இருந்த நிலையம் ஜொலிக்கிறது.  தற்பொழுது கட்டப்பட்டு உள்ள இந்த பேருந்து நிலையம் உக்கடம் முனையும் ஒன்று ஆக செயல்படும், இங்கு பயணிகளுக்கான உணவகம், கழிப்பறை மற்றும் கடைகள் உள்ளிட்டவை கட்டப்பட்டு உள்ளது. இங்கு இருந்து நகரப் பேருந்துகள் மற்றும் மினி பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து பழைய உக்கடம் பேருந்து நிலையத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு இருந்து கேரளா மாநிலம் பாலக்காடு உள்ளிட்ட பிறகு பகுதிகளுக்கும் பொள்ளாச்சி, உடுமலை உள்ளிட்ட இடங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படும். இந்த பேருந்து நிலையம் மொத்தம் 80 பேருந்துகளை கையாளும் வசதி இருக்கும். புதிய பேருந்து நிலையத்தில் இணையதள வசதி, செல்போன் சார்ஜிங் வசதி, தாய்மார்கள் பாலூட்டும் அறைகள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் அலங்கார செடிகளும் அமைக்கப்பட்டு பேருந்து நிலையம் அழகு படுத்தப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.