Chengalpattu Tourist Places: செங்கல்பட்டு மாவட்டத்தில் பட்ஜெட் சுற்றுலா போக விரும்புபவர்களுக்கு  சுவாரசிய தகவல்களை  கொண்டு வந்திருக்கிறது Travel With ABP.


வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் - Vedanthangal Bird Sanctuary


இந்தியாவில் மிகப் பெரிய  நீர் பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், செங்கல்பட்டில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த சரணாலயம் பார்வையிட சிறந்த நேரம் நவம்பர் முதல் மார்ச் வரை ஆகும். சாம்பல் வாக்டெயில், கார்கேனி, நீல இறக்கைகள் கொண்ட டீல், காமன் சாண்ட்பைப்பர், பின்டெயில், பாம்பு பறவைகள், மூர்ஹென்ஸ், டார்டர்ஸ், ஸ்பாட்-பில்ட் வாத்து, பெரிய ஈக்ரெட்ஸ், லிட்டில் ஈக்ரெட்ஸ், பெயிண்ட்டு நாரைகள், மண்வெட்டிகள், கிரே பெலிகன்கள், கார்மோரண்ட்கள் போன்ற பறவைகளை பார்க்க முடியும். நுழைவு கட்டணம் 25 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.



செங்கல்பட்டு ரயில் நிலையம்  வந்தடைந்து அங்கிருந்து பேருந்திலும் செல்லலாம். தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து வருபவர்கள் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக பட்டாளம் கூட்ரோடு பகுதியை  அடைந்து அங்கிருந்து வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் சொல்லலாம். பட்ஜெட் சுற்றுலா செல்பவர்களுக்கு மிக சிறந்த இடம்.


மாமல்லபுரம் - Mamallapuram Temple


சுற்றுலா செல்பவர்களுக்கு மிக முக்கிய இடமாகவும்,  கலை பொக்கிஷங்கள் நிறைந்த இடமாகவும் மாமல்லபுரம் உள்ளது. மாமல்லபுரம் கடற்கரை,  மாமல்லபுரம் கடற்கரை கோயில்,  அர்ஜுனன் தபசு,  கலங்கரை விளக்கம்,  5 ரதம் ஆகிய பகுதிகளை மாமல்லபுரத்தில் கண்டு களிக்கலாம்.  ஒரு நாள் மாமல்லபுரத்தில் சுற்றி பார்ப்பது ஏற்ற இடங்கள் உள்ளன. கடற்கரை கோயில்  உள்ளே சென்று பார்ப்பவர்களுக்கு மட்டும் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


பிற இடங்களை பார்க்க நுழைவு கட்டணம் தேவையில்லை. வீட்டிலிருந்து உணவை எடுத்து வந்தால்,  போக்குவரத்து செலவு மட்டுமே  தேவைப்படும்.


சென்னை,  தாம்பரம்,  செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகிறது.    பட்ஜெட்டுக்கு ஏற்ற இடம் மாமல்லபுரம் கடற்கரை கோயில்


வண்டலூர் உயிரியல் பூங்கா - vandalur zoo 


சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வண்டலூர் உயிரியல் பூங்கா குடும்பத்துடன் செலவு செய்ய ஏற்ற இடம்.  பெரியவர்களுக்கு நிறைவு கட்டணம் 200 ரூபாயும், குழந்தைகளுக்கு ஐம்பது ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. வெளியில் இருந்து உணவுகளை எடுத்துட்டு வரலாம்,  என்பதால் கூடுதல் சிறப்பு.


பல்வேறு வகையான விலங்குகளை  குழந்தைகளுக்கு நேரில் காட்ட முடியும் என்பதால், கல்வி சுற்றுலாவும் இது அமையும். கிளாம்பாக்கம் அருகே உள்ளதால் பேருந்து வசதிக்கு பிரச்சனை இல்லை.  மின்சார ரயில் வசதியும் உள்ளது என்பதால்,  போக்குவரத்து செலவு   பட்ஜெட்டில் அடங்கிவிடும்.  சென்னை புறநகரில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்களில் ஒன்று.


முட்டுக்காடு படகு குழாம் - Muttukadu Boat House


சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு பகுதியில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து வருபவர்கள் ஈ.சி.ஆர் வழியாக வரும் பேருந்துகளில் வரலாம். பிற பகுதிகளில் இருந்து வருபவர்கள் திருப்போரூர் அல்லது    கேளம்பாக்கம்   பேருந்து நிலையத்திலிருந்து பேருந்தில் வரலாம். மாநகர பேருந்துகள் படகு குழாம் அருகே நிற்கிறது. சொந்த வாகனங்களில் வருபவர்களுக்கு பார்க்கிங் வசதியும் உள்ளது. பேருந்து வசதி இருப்பதால்,  போக்குவரத்து செலவு பட்ஜெட்டில் அடங்கிவிடும்.




படகு சவாரி செல்ல வேண்டாம் அதன் அழகை மட்டும் ரசித்தால் போதும்   என்பவர்கள் பத்து ரூபாய் நுழைவு கட்டணம் செலுத்தி விட்டு   அழகை  ரசிக்கலாம். படகு சவாரி விலையை தெரிந்து கொள்ள கிளிக் செய்யவும்


கோவளம் ப்ளூ ஃப்ளாக் கடற்கரை - kovalam blue flag beach 


தமிழ்நாட்டில் இருக்கும் நீலக்கொடி கடற்கரை என சான்றிதழ் பெற்ற  கடற்கரையாக கோவளம்  கடற்கரை உள்ளது. பார்வையாளர்களுக்கு சுமார் 37 வகையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.  கடற்கரை மணல் சுத்தம் செய்யப்படுகிறது.  சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கழிப்பறை வசதிகள் கடலில் விளையாடிவிட்டு,  குளிக்க விரும்புபவர்களுக்கு ஷவர் வசதிகள்  செய்யப்பட்டுள்ளது. இப்படி உலகத்தரம் வாய்ந்த அனைத்து வசதிகளும் உள்ள கடற்கரையாக கோவளம் ப்ளூ   பிளாக் பீச் அமைந்துள்ளது.