சென்னை புறநகர் மற்றும் சென்னை மாநகர் பகுதியை இணைக்கக்கூடிய முக்கிய போக்குவரத்துக்காக ரயில் போக்குவரத்து இருந்து வருகிறது. இந்தநிலையில் பொன்னேரி மற்றும் கவரைப்பேட்டை இடையே உள்ள ரயில் நிலையங்களில் ரயில் பாதைகள் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் நாளை (13-03-2025) மற்றும் 15-03-2025 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரல் முதல் கும்மிடிப்பூண்டி வரை செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

சென்னை சென்ட்ரல் முதல் கும்மிடிப்பூண்டி வரை முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்களின் விவரம் :

காலை 8 மணிக்கு சென்ட்ரல் முதல் கும்மிடிப்பூண்டி வரை செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

காலை 9 மணிக்கு சென்ட்ரல் முதல் கும்மிடிப்பூண்டி வரை செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

காலை 9:30 மணிக்கு சென்ட்ரல் முதல் கும்மிடிப்பூண்டி வரை செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

காலை 10:30 மணிக்கு சென்ட்ரல் முதல் கும்மிடிப்பூண்டி வரை செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

காலை 11:35 மணிக்கு சென்ட்ரல் முதல் கும்மிடிப்பூண்டி வரை செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

காலை 8:35 சென்னை சென்ட்ரல் முதல் சூலுார்பேட்டை வரை செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

காலை 10:15 சென்னை சென்ட்ரல் முதல் சூலுார்பேட்டை வரை செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

பகல் 12:10 சென்னை சென்ட்ரல் முதல் சூலுார்பேட்டை வரை செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

மதியம் 1:05 சென்னை சென்ட்ரல் முதல் சூலுார்பேட்டை வரை செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது

சென்னை கடற்கரை முதல் கும்மிடிப்பூண்டி வரை 

காலை 9:40 மணிக்கு சென்னை கடற்கரை முதல் கும்மிடிப்பூண்டி வரை செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. 

பகல் 12:40 மணிக்கு சென்னை கடற்கரை முதல் கும்மிடிப்பூண்டி வரை செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. 

சூலுார்பேட்டை - நெல்லுார்

மாலை 3:50 மணிக்கு சூலுார்பேட்டை - நெல்லுார் செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

சென்ட்ரல் - ஆவடி இரவு 11:40 மணி ரயில் முழுமையாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரல் 

காலை 9:55 மணிக்கு கும்மிடிப்பூண்டி - சென்ட்ரல் வரை செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது .

காலை 11:25 மணிக்கு கும்மிடிப்பூண்டி - சென்ட்ரல் வரை செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது

காலை 12:00 மணிக்கு கும்மிடிப்பூண்டி - சென்ட்ரல் வரை செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரை

காலை 10:55 செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது ‌

நெல்லுார் - சூலுார்பேட்டை 

மாலை 6:45 மணி ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

சூலுார்பேட்டை -சென்னை சென்ட்ரல்

காலை 11:45 மணி ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

மதியம் 1:00 மணி ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

மதியம் 1:15 மணி ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

மதியம் 2:30 மணி ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

மாலை 3:15 மணி ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

இரவு 9:00 மணி ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

பகுதியாக ரத்து செய்யப்படும் ரயில்கள் விவரம்:

செங்கல்பட்டு - கும்மிடிப்பூண்டி, காலை 9:55 மணி ரயில் கடற்கரை வரை மட்டுமே இயக்கப்படும்

கும்மிடிப்பூண்டி - தாம்பரம், மாலை 3:00 மணி ரயில் கடற்கரையில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.