கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.  இந்த ஏரி கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாகவும், சென்னை மாநகர மக்களின் தாகத்தை தீர்ப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.  இந்த ஏரிக்கு சாதாரண காலங்களில் வடவாறு வழியாகவும், மழைக்காலங்களில் வீராணம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்கின்ற மழைநீர் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாக ஏரிக்கு வரும். கீழனியில் இருந்து , வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 1,700 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.



இதனால் வறண்டு கிடந்த வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. வீராணம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடியில்  40 கள அடியை எட்டிய உடன் வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்பப்படும் அதன்படி கடந்த வாரம் ஏரியின் நீர்மட்டம் 41.10 அடியை எட்டியதால் கடந்த 6 மாதங்களுக்கு பிறகு சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியில் இருந்து சென்ற வாரம் வினாடிக்கு 10 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது இந்நிலையில் தற்பொழுது வீராணம் ஏரி முழுவதும் நிரம்பியதால் தற்பொழுது சென்னைக்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 56 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 



கீழணையில் இருந்து தொடர்ந்து அதே அளவு தண்ணீர் வருவதால் மூன்று நாட்களுக்கு முன் 46 அடியில் இருந்த நீர்மட்டம் நேற்று  தனது முழு கொள்ளளவான 47.50  அடியை எட்டியது. ஏரி முழு கொள்ளளவை  எட்டியுள்ளது, ஆனாலும்  பாசனவாய்க்கால்களின் அனைத்து ஷட்டர்களும் மூடப்பட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கவில்லை, இதனிடையே பூதங்குடி வி என் என் மதகு திறக்கப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்படுகிறது ,இந்த தண்ணீர் வெள்ளாறு அணைக்கட்டில் சேமித்து வாலாஜா ஏரிக்கு அனுப்பும் பணிகள் பொதுப்பணித்துறை மூலமாக நடைபெற்று வருகின்றனர், மேலும் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் தண்ணீரை தேக்கி வைத்து சென்னிநத்தம், கிளாங்காடு, சக்தி வினாகள் ஆகிய மூன்று கிராமங்கள் பயன்பெறும் வகையில் வெல்லாற்றில்  தண்ணீரை திறந்து விடுவதன் மூலம் நிலத் தடி நீர மட்டம் உயரும் எனவும் மூன்று கிராமங்களும் பொதுப்பணித்துறையிடம் கோரிக்கை வைத்ததுள்ளது குறிப்பிடத்தக்கது. விவசாயத்திற்கு என தண்ணீர் திறக்காதது ஏமாற்றம் அளித்துள்ளது.



தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை நகர மக்களுக்கு மிக முக்கியமான குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது அவர்களின் தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் தான் முதல்முறையாக ஆறு மாதங்களுக்கு பிறகு குடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. ஆனால் தற்பொழுது வீராணம் ஏரி நிரம்பியதால் சென்ற வாரம் அனுப்பட்டதை விட தற்பொழுது அதிகமாக அனுப்பப்படுகிறது இதனால் சென்னை மக்களின் குடிநீர் பிரச்சனை தீரும் நிலை ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சி அளித்துள்ளது.