கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் ஏராளமான முதலைகள் உள்ளன. இந்த ஆற்றில் உள்ள கிளை வாய்க்காலில் இருந்து அவ்வப்போது, முதலைகள் வெளியேறி ஊருக்குள் புகுந்து விடுவதும், பின்னர் அந்த முதலைகளை வனத்துறையினர் பிடித்து நீர் தேக்கத்தில் விடுவதும் வாடிக்கையாகி விட்டது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட முதலை ஊருக்குள் புகுந்து உள்ளது ஆனால் மக்கள் மற்றும் வனத்துறையினர் பிடித்து மீண்டும் ஆற்றில் விடப்பட்டன.

 



கோப்புப்படம் 

 

இந்நிலையில் சிதம்பரம் அருகே உள்ள பழையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் கோபாலகிருஷ்ணன் (65) இந்நிலையில் இவர் நேற்று இரவு 7 மணியளவில் பழைய கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றார். அங்கு சென்று கரையோரம் அவர் குளித்து கொண்டிருந்தபோது திடீரென ஆற்றில் இருந்து வந்த ராட்சத முதலை ஒன்று கோபாலகிருஷ்ணனை ஆற்றில் இழுத்து சென்றுவிட்டது. அருகில் குளித்து கொண்டிருந்தவர்கள் கோபாலகிருஷ்ணனை முதலை இழுந்து சென்றதை அறிந்து அலறி கூச்சலிட்டனர்.



 

பின் சிறிது நேரத்திற்கு பிறகு குளிக்க சென்ற கோபாலகிருஷ்ணன் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் ஆற்றுக்கு ஓடிவந்தனர். அப்போது கோபாலகிருஷ்ணளை முதலை இழுத்து சென்ற தகவலை அங்கிருந்தவர்கள் அவர்களிடம் கூறினர். கதறி அழுத அவரது குடும்பத்தினர், உடனடியாக இதுகுறித்து சிதம்பரம் அண்ணாமலைநகர் காவல் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.



 

பின் சிதம்பரம் தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆற்றில் இறங்கி கோபாலகிருஷ்ணனை தேடினர் வெகு நேரம் ஆனது இருப்பினும் அவர் கிடைக்கவில்லை. பின் படகில் சென்று தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்களும் இரவு 10.30 வரை தேடினர். அப்போது ஆற்றின் ஒரு மூலையில் முதலை தன் வாயில் எதையோ வைத்து கடித்து கொண்டிருந்தது, பின் வெளிச்சம் அடித்து பார்க்கையில் அது கோபாலகிருஷ்ணனின் சடலம் இதனை கண்டதும் ஊர்மக்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் சடலத்தை மீட்க முயன்றனர். ஆனால் முதலை சடலத்தை விடாமல் முரண்டு பிடித்தது. பின்னர் முதலையை அடித்து விரட்டி விட்டு சடலத்தை மீட்டனர். ஆற்றில் குளிக்க சென்ற நபரை முதலை இழுத்து சென்று விழுங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 



 

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு கோபாலகிருஷ்ணனின் சகோதரர் அறிவானந்தம் என்பவர் பழைய கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றபோது முதலை இழுத்துச்சென்று இறந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. சகோதரர் இருவரையும் முதலை இழுத்து சென்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிதம்பரம் காட்டுமன்னார்கோயில் பகுதியில் பழைய கொள்ளிட ஆறு மற்றும் அதன் உபரி நீர் செல்லும் பகுதிகளில் ஏராளமான முதலைகள் கடித்து கடந்த 10 ஆண்டுகளில் 10 பேர் உயிரிழந்ததாக அப்பகுதியினர் அதிர்ச்சியுடன் கூறுகின்றனர். மேலும் பலர் கை, கால் உள்ளிட்ட உடல் உறுப்புகளையும் இழந்துள்ளவர், கடந்த சிலை தினங்களுக்கு முன்பு தவர்த்தம்பட்டு, பளங்காடு ஆகிய கிராமங்களில் ஒரே நாளில் இரண்டு பேர் முதலை கடிக்கு ஆளாகி உள்ளனர். எனவே இது போல் நடைபெறாமல் இருக்க சிதம்பரம் அருகே முதலை பண்னை அமைக்க வேண்டும் கொள்ளிடம் ஆற்றில் பிடிபடும் முதலைகளை அந்த பண்ணையில் விட்டு பாதுகாக்க வேண்டும் என அந்த ஊர் மக்கள் கோரிக்கை வைத்தனர்.