சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது மகள் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் ;
நான் ஆகஸ்ட் 17 ஆம் தேதி பொதுக் குழு கூடுவதற்கு அறிவிப்பு வெளியிட்டு இருந்தேன் என்னால் செயல் தலைவர் என்று சொல்லப்பட்ட அன்புமணி ஒன்பதாம் தேதி பொதுக் குழுவை கூட்டியுள்ளார். இது கட்சி விதிகளுக்கு புறம்பானது.
கட்சி விதிகளுக்கு புறம்பானது
பொதுவாக ஒரு பொதுக்குழு கூட்டப்பட வேண்டும் என்றால் 15 நாட்களுக்கு முன்பு பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். அதனால் முறையாக 17 ஆம் தேதி இந்த பொதுக் குழுவை அறிவித்திருக்கிறேன். அதனால் வேறு எவரும் பாட்டாளி மக்கள் கட்சியின் பெயரிலோ பொதுக்குழு கூட்டுவது சொல்வது கட்சி விதிகளுக்கு புறம்பானது.
காவல் நிலையத்தில் புகார்
உலகத்தில் தந்தையை வேவு பார்த்த உளவு பார்த்த பிள்ளை இருக்கிறார். விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் காவல் நிலைய ஆய்வாளரிடம் புகார் கொடுத்துள்ளோம். அதே போன்று சைபர் கிரைம் துறையிடமும் புகார் கொடுத்துள்ளேன். அந்த கருவியை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளோம்.
ஒரு பக்கம் காவல்துறை சைபர் கிரைம் மற்றும் ஒரு ஸ்பெஷல் ஏஜென்சியை வைத்து இது குறித்து விசாரித்து வருகிறார்கள். அவர்களும் விரைவில் இது சம்பந்தமாக அறிக்கை சமர்ப்பிப்பார்கள்.
எங்களின் கட்சியின் மாநில மகளிர் சங்க மாநாடு மிக எழுச்சியோடு இரண்டு லட்சம் மூன்று லட்சம் மகளிர்கள் கூடும் மாநாடு இந்த மாதம் பத்தாம் தேதி நடக்க இருக்கிறது. ஒவ்வொரு முறையும் ஒரு பொய்யை சொல்கிறார். அன்புமணி என்னை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தூக்கப் போகிறார்கள். மாவட்ட தலைவர்களே என்று கூட்டத்தில் பேசுகிறார். மாவட்ட செயலாளர்களை எனது வீட்டிற்கு அழைத்தேன் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று அழைத்தேன். அதிகாலை 3 மணி வரை 100 பேருக்கும் போகாதே என்று தொலைபேசியில் சொல்லி 100 பேரும் வரவில்லை நான் நியமித்த மாவட்ட செயலாளர்கள் அவர்கள்.
யாருக்கும் உரிமை இல்லை
100 மாவட்ட செயலாளர்களில் 8 பேர் தான் வந்தார்கள். அதனால் அந்த 100 பேரையும் நீக்கி விட்டு கட்சியில் சிறப்பாக செயலாற்றிய மற்றவர்களை மாவட்ட செயலாளராக நியமித்தேன். கட்சியை நிறுவியது நான், கட்சி தலைவர் நான், என்னை பார்க்க கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது.
பீகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்ட 36 லட்சம் பேரில் ஆறரை லட்சம் பேர் தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பீகார் மக்கள் இங்கு வந்து வாக்களிப்பது சரியாக இருக்காது வேலை செய்ய வந்திருக்கிறார்கள் வேலை செய்துவிட்டு சென்றுவிடுவார்கள் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராகி மக்களுக்கு பணியாற்ற முடியாது சேவை செய்ய முடியாது. எனது வீட்டில் உளவு பார்க்கும் கருவியை வைத்தது அன்புமணி தான். இவ்வாறு அவர் பேசினார்.