சென்னையில் தனியார் நகரப் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்க அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


மாநகர போக்குவரத்து கழகமே, தனியாரிடமிருந்து பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் பெற்று இயக்க முடிவு என கூறப்படுகிறது. முதற்கட்டமாக 2023 ஆம் ஆண்டில் 500 தனியார் பேருந்துகள், சென்னையில் இயக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டில் மேலும் 500 இயக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பேருந்து ஓட்டுநரை தனியார் நிறுவனமும், நடத்துநரை மாநகர போக்குவரத்து கழகமும் நியமிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.