சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மேலே செல்லும் மின்சார கம்பிகள் அல்லாமல் மண்ணிற்கு கீழே புதைவட கம்பிகளாக புதைக்கப்பட்டு மின்சார விநியோகம் நடைபெற்று வருகிறது. இருப்பினும் சில இடங்களில் புதைவடங்களாக மாற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மின்வாரியம் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில், “நீலாங்கரை பகுதியில் மேலே செல்லும் உயரழுத்த மின்கம்பிகளை புதைவிடமாக மாற்றும் பணிகளும், வளைய சுற்றுத்தர அமைப்பு(ஆர்.எம்.யு) பணிகளும் நடைபெறுவதால் வரும் 12-ந் தேதி( திங்கள்கிழமை) கீழ்க்காணும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.


ப்ளூ பீச் சாலை. மரக்காயர் நகர் முதலாவது தெரு முதல் 7வது தெரு வரை, கபாலீஸ்வரர் நகர் 4வது பிரதான சாலை. சீ வியூவ் அவென்யூ, முருகம்பாள் அவென்யூ, பெரிய நீலாங்கரை குப்பம், கேசுரினா டிரைவ்வின் ஒரு பகுதியில் மின் தடை ஏற்படும்”. இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.