மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக சென்னையில் அடையாறு, தாம்பரம், வியாசர்பாடி பகுதிகளில் இன்று காலை 9 மணிமுதல் மதியம் வரை மின் தடை ஏற்படும்  என மின்சார வாரியத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


 தமிழ்நாடு  மின்சார வாரியத்தின் கீழ் உள்ள பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்கு மின் விநியோகம் நிறுத்தப்படும். இதனால் மக்கள் எந்தவகையிலும் இன்னல்களை சந்திக்கக்கூடாது என முன்கூட்டியே மின்சார வாரியத்தின் மூலம் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படுமோ? அதுக்குறித்த அறிவிப்பு வெளியாகிவிடும்.  அந்த வகையில் இன்று சென்னையில் அடையாறு, தாம்பரம், வியாசார்பாடி ஆகிய முக்கிய பகுதிகளில் பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  எந்தெந்த ஏரியாக்களுக்கு இந்த மின் தடை அறிவிப்பு என்பதை இங்கே அறிந்துகொள்வோம்.



மின்தடை ஏற்படவுள்ள அடையாறு பகுதிகள்:


மின்சார வாரியத்தின் பராமரிப்புப் பணி காரணமாக அடையாறு பகுதியில் உள்ள அப்பர் தெரு, டைகர் வரதாச்சாரி ரோடு, ருக்மணி நகர், பாரி தெரு, கங்கை தெரு, திருமுருகன் தெரு, பீச் ரோடு உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படவிருக்கிறது.


அதேபோன்று தாம்பரத்தில், கோவிலாம்பாக்கம், அண்ணா மெயின் ரோடு, சத்யா நகர், ராகவா நகர், ஓம் சக்தி நகர், குறிஞ்சி நகர், எம்.ஜி.ஆர் தெரு, மேடவாக்கம் மெயின் ரோடு, முத்தையா நகர், அம்பேத்கார் சாலை வரதாபுரம் கைலாஷ்நகர், பஜனை கோவில் தெரு, அந்தோனி நகர், நூக்கம்பாளையம், நேசமணி நகர், அம்பேத்கார் தெரு கடப்பேரி ரயில் நகர், அற்புதம் நகர், அம்மன் நகர், பர்மா காலணி, ராதா நகர், ஜி.எஸ்.டி ரோடு, சரவணா ஸ்டோர், பாலாஜி பவன் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.


பெருங்குடி பகுதியில் மின்தடை ஏற்படவுள்ள இடங்கள் :  காசுரா கார்டன்1,2 மெயின் ரோடு, மேட்டு காலணி மற்றும் ஈ.சி.ஆர் , அபிபா தெரு, எம்.ஜி.ஆர் ரோடு, சின்ன நீலாங்கரி குப்பம், சுகுணா திருமண மண்டபம், பெரியார் சாலை, கந்தசாமி நகர், பச்சையப்பன் தெரு, கங்கை தெரு மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகள்.


 செங்குன்றம் பகுதியில் மின்தடை ஏற்படும் இடங்கள்: விவேக் அக்பர் அவென்யூ, ஜோதி நகர். பிடி மூர்த்தி நகர், மகாலட்சுமி நகர், மருதபாண்டி நகர் மற்றும் இதனைச்சுற்றியுள்ள பகுதிகள். 


மேற்கண்ட இந்தப்பகுதிகளில் இன்று காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்பதால் அதற்கேற்றால் போல் மக்கள் தங்களது பணிகளை அமைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுத்தப்பட்டுள்ளது.