செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, முக்கிய போக்குவரத்து மாற்றத்தை அறிவித்துள்ளது.

Continues below advertisement


தீபாவளி பண்டிகை


தீபாவளி பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை வரவுள்ள நிலையில், போக்குவரத்து மாற்றத்தை செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை மேற்கொண்டுள்ளது. தீபாவளிக்கு செல்பவர்கள் எந்தவித பிரச்சனையும் இல்லாமல், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் செல்வதற்கு முக்கிய அறிவிப்பு செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.


காவல்துறை அறிவுறுத்தல் என்ன?


செங்கல்பட்டு புக்கத்துறை மற்றும் கட்டுமானம் மற்றும் சாலை-ல் மாவட்டத்தில் NH-32 (GST படாளம் சாலை சந்திப்புகளில் மேம்பால சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதால் தீபாவளி பண்டிகைக்கு (17.10.2025 to 18.10.2025) விடுமுறையில் செல்வோர் போக்குவரத்து நெரிசலை சந்திக்க நேரிடும். ,


1. சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு பயணிக்கும் போது தாமதங்களை தவிர்க்க ECR, GWT சாலை வழியாக செல்லும்படி அறிவுறுத்தப்படுகிறது.


II. மேலும், செங்கல்பட்டு மற்றும் சென்னையின் தென் பகுதிகளில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் படாளம் மற்றும் புக்கத்துறை மேம்பால பணி நடைபெறும் பகுதிகளை தவிர்க்க செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் மேலவளம்பேட்டை வழியாக மீண்டும் GST சாலையை அடைந்து செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறது.


III. மேலும், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள்


3) செங்கல்பட்டு திருமுக்கூடல் வந்தவாசி காஞ்சிபுரம் பைபாஸ் வழியாக நெல்வாய் X ரோடு உத்திரமேரூர் திண்டிவனம் வழியாக செல்லும்படி அறிவுறுத்தப்படுகிறது.


b) சென்னையிலிருந்து மாவட்டங்களை நோக்கி மேற்கு செல்லும் கனரக வாகனங்கள் GWT சாலை வழியாக செல்லும்படி அறிவுறுத்தப்படுகிறது.


c) மேலும், சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து செங்கல்பட்டு மார்க்கமாக வரும் கனரக வாகனங்கள் GST சாலையில் 17.10.2025 காலை 06.00 மணி முதல் 18.10.2025 இரவு 12.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படமாட்டாது கொள்ளப்படுகிறது.