ரோந்து பணி


செங்கல்பட்டு மாவட்ட  எஸ்.பி  பிரதீப் ஐ.பி.எஸ். நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது,  "புத்தாண்டு கொண்டாட்டம் 2023 முன்னிட்டு 30.12.2022 இரவு 7 மணி முதல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளான இ.சி.ஆர்., ஓ.எம்.ஆர். மற்றும் ஜி.எஸ்.டி. மற்றும் மாவட்டத்தின் பல முக்கிய சந்திப்புகள் உட்பட மொத்தம் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபடுத்தப்படுவார்கள். மேலும் மாவட்டத்தில் சுமார் 180-க்கும் மேற்பட்ட மிக முக்கிய இடங்கள், கோயில்கள் .தேவாலயங்கள் போன்றவற்றிற்கு ரோந்து காவலர்கள் நியமித்து தீவிர ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள்.





930 காவலர்கள் 


மேலும் 30-க்கும் மேற்பட்ட காவல் துறை ஆய்வாளர் பணிநிலைக்கு, மேலுள்ள அதிகாரிகள் தொடர் ரோந்து அலுவலில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பு பணிக்கு SP 1, ADSP-1, DSP-6, Inspr - 21 மற்றும் 930 காவலர்கள் என மொத்தம் 960 காவல் அதிகாரிகள் ஆளிநர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.




1 மணி மேல்


பொதுமக்கள் புத்தாண்டு கொண்டாடத்தின் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் பின்வருமாறு, பொதுமக்கள் அரசு வகுத்துள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பொது இடங்களில் சமூக இடைவெளி ஆகியவை கட்டாயம் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறது. ECR, OMR மற்றும் GST சாலைகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் Beach Resorts உணவகங்களில் புத்தாண்டு கொண்டாட்டமானது 01.01.2023 தேதி 1 மணி மேல் எந்தவித நிகழ்ச்சியும் கொண்டாட்டங்களும் நடத்தக்கூடாது.




வழக்கு பதிவு


பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பட்டாசு வெடித்தல் கூடாது. இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் வரும் நபர்கள் மதுபோதையில் வாகனத்தை இயக்கக்கூடாது மீறும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வானத்தை பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்தார்.


 




 


Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண