திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கர்ணலாபாடி கிராமத்தைச் சார்ந்த மதியழகன் மனைவி விஜயா வயது (48) இவர்கள் சென்னை செம்மஞ்சேரி பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். மதியழகனுக்கும் விஜயாவிற்கும் திருமணம் நடந்து 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை என்று கூறப்படுகிறது.


இந்நிலையில் துரைப்பாக்கம் பகுதிக்கு உட்பட்ட ஆல்பர்ட் என்பவருடைய மனைவி நிர்த்தி இவர்களுக்கு  ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் நிர்த்திக்கு சமீபத்தில் கர்ப்பமாகி அவருக்கு மீண்டும் ஒரு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அதனைத்தொடர்ந்து ஆல்பர்ட் குடி போதைக்கு அடிமையானவர், இவர் தினந்தோறும் குடிபோதையில் அவருடைய மனைவி நீர்த்தியிடம்  அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மீண்டும் குழந்தை பிறந்த பிறகும் ஆல்பர்ட் மனைவியிடம் குடிபோதையில் சண்டையிட்டுள்ளார்.


 




இதனால் மனம் உடைந்து போன நீர்த்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் அறிந்த விஜயா நேரடியாக சென்னை சென்று குழந்தையின் தாய் நீர்த்தியிடம் குழந்தையை தத்தெடுத்துக்கொள்வதாக கேட்டுள்ளார். அதன் பிறகு விஜயா பிறந்து 7 நாள் ஆன பெண் குழந்தையை சட்டப்படி தத்தெடுக்க முயற்சி செய்தார். ஆனால் குழந்தை தத்தெடுப்பதற்கான சட்டமுறைகளை அறிந்து கொண்ட விஜயா தனக்கு சட்டப்படி சென்றால் குழந்தை உடனடியாக தத்தெடுக்க முடியாததை அறிந்தார், குழந்தையின் தாய் நீர்த்தியிடம் மனப்பூர்வமாக குழந்தையை விஜயாவிடம் ஒப்படைப்பதாக எழுதிய கடிதத்தை நீர்த்தி விஜயாவிடம்  எழுதி கொடுத்துள்ளார்.




 


இதனைத்தொடர்ந்து விஜயா அந்தக் குழந்தையை ஒரு கட்டை பையில் வைத்துக்கொண்டு சென்னையில் இருந்து பேருந்தில் திருவண்ணாமலை பேருந்து நிலையத்திற்கு வந்து இறங்கியுள்ளார். பின்னர் பேருந்து நிலையத்தில் இருந்து  தனது சொந்த ஊருக்கு செல்ல வேறொரு பேருந்து நிலையத்திற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது கட்டப்பையில் இருந்த குழந்தை அழுதுள்ளது. அங்கு கடை வைத்து வியாபாரம் செய்யும் நபர்கள் சந்தேகம் அடைந்து விஜயாவை நிறுத்தி கட்டைப்பையை பார்த்துள்ளனர். அப்போது கட்டைபையை திறந்து பார்த்த போது குழந்தை இருந்ததை கண்ட அவர்கள், உடனடியாக அங்கு இருந்த கடைக்காரர்கள் ஆட்டோவில் ஏற்றி அவரை உடனடியாக  அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று காவலரிடம் புகார் அளித்துள்ளனர்.


 




விஜயாவிடம்  கட்டைப் பையில் இருந்த ஏழு நாட்கள் ஆன பெண் குழந்தையை காவல்துறையை மீட்டனர். பின்னர் மகளிர் காவல் துறையினர் விஜயாவிடம் நடத்திய விசாரணையில் சென்னை துரைப்பாக்கத்தைச் சார்ந்த நீர்த்தியிடம் மனப்பூர்வமாக எனக்கு குழந்தை அளிப்பதாக கடிதம் எழுதிக் கொடுத்த பின்னர் தான் குழந்தையை நான் பெற்று செல்வதாக கூறினார்.


உடனடியாக காவல்துறையினர் குழந்தையின் தாய் நீர்த்தியை விசாரணைக்காக திருவண்ணாமலை வரச்சொல்லி தகவல் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து விஜயாவிடம் மீட்கப்பட்ட ஏழு நாள் ஆன பெண் குழந்தையை குழந்தை பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.  பிறந்து 7 நாட்களை ஆன குழந்தையை கட்டைப் பையில் கொண்டு சென்ற சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.