TN Rain Alert: அடுத்த 4 நாட்களுக்கு மழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில் மழை? வானிலை அப்டேட் இதோ..

கேரள பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 தினங்களுக்கு லேசான முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

கேரள பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக  தமிழகத்தில் அடுத்த 4 தினங்களுக்கு லேசான முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

29.11.2022: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,  வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும்  இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

30.11.2022, 01.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். 

02.12.2022, 03.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

கன்னிமார் (கன்னியாகுமரி) 12, மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), அணைகெடங்கு (கன்னியாகுமரி) தலா 9, பூதபாண்டி (கன்னியாகுமரி) 8, சோத்துப்பாறை (தேனி), மஞ்சளார் (தேனி), தக்கலை (கன்னியாகுமரி) தலா 7, போடிநாயக்கனூர் (தேனி), கீழ் கோதையார் ARG (கன்னியாகுமரி), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்) தலா 6, மேட்டூர் (சேலம்), கயத்தார் ARG (தூத்துக்குடி), தூத்துக்குடி, கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), முக்கடல் அணை (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) தலா 5, ஆழியார் (கோவை), மேட்டுப்பாளையம் (கோவை), வத்திராயிருப்பு (விருதுநகர்), ஆலங்குடி (புதுக்கோட்டை), தொண்டி (ராமநாதபுரம்), சூரலக்கோடு (கன்னியாகுமரி) தலா 4, பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி), விருதுநகர் AWS, மதுரை தெற்கு (மதுரை), வாடிப்பட்டி (மதுரை), பெரியநாயக்கன்பாளையம் (கோவை), கொத்தவாச்சேரி (கடலூர்), கயத்தாறு (தூத்துக்குடி), தல்லாகுளம் (மதுரை), குன்னூர் (நீலகிரி), கொடநாடு (நீலகிரி) தலா 3, சிவகாசி (விருதுநகர்), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), சிவலோகம் (கன்னியாகுமரி), திருமூர்த்தி அணை (திருப்பூர்), ராஜபாளையம் (விருதுநகர்),  பரலியார் (நீலகிரி), தேக்கடி (தேனி), சிவகிரி (தென்காசி) தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

கனமழை காரணமாக தேனி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதேபோல், விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

நவம்பர் 25 முதல் டிசம்பர் 8 வரையிலும் வடகிழக்கு பருவமழை இயல்பை விட குறைவதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குனர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்

தமிழகம் புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளில் கடந்த வாரம் நவம்பர் 17 முதல் 23 வரை வடகிழக்கு பருவமழை வெகு குறைவாக இயல்பை விட பதிவாகியுள்ளது.

இயல்பான மழை அளவு 34 மில்லி மீட்டர் ஆனால் தற்பொழுது பதிவான மழையின் அளவு 3 மில்லி மீட்டர் 91% குறைவாக மழை பதிவாகியுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola