சென்னை எழும்பூர் மண்டல அரசு கண் மருத்துவ இயல் நிலையம் மற்றும் அரசினர் கண் மருத்துவமனையில் 39 வது கண் தான இரு வார விழா மற்றும் கண்தானம் செய்த நல்லுள்ளங்களை சிறப்பிக்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கலந்து கொண்டு உரையாற்றினார்.


மேலும் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணிராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது ,


ஆசியாவின் பழமையான மருத்துவமனை மற்றும் உலகின் 2வது பழமையான மருத்துவமனை எழும்பூர் அரசு கண் மருத்துவமனை. 13 வயது சிறுவனுக்கும், 70 வயது முதிய பெண்மணிக்கும் வெற்றிகரமாக கருவிழி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. முத்தமிழறிஞர் கலைஞர் முதல்வராக இருந்த காலத்தில் மருத்துவ தம்பதியின் மூளைச்சாவடைந்த மகனின் உறுப்புகளை தானம் செய்ததற்காக அவர்களை நேரில் அழைத்து பாராட்டினார்கள்.


தமிழ்நாடு உறுப்பு தானத்தில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை செய்யப்படும் என அரசாணை அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டார். அரசாணை வெளியிட்ட பிறகு 249 பேர் தற்போது வரை உடலுறுப்பு தானம் செய்துள்ளனர். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இருந்து 42 கண்கள் இதுவரை தானமாக பெறப்பட்டுள்ளது.


தேசிய அளவில் 25 சதவீதம் கண்விழிகள் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் பெறப்படுகிறது. முதலமைச்சர் முயற்சி இருமடங்காக உயர்ந்து வெற்றி பெற்றுள்ளது.


திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 125634 கண் அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டு மகத்தான சாதனை செய்துள்ளது. வருடத்திற்கு 1,000 க்கும் மேற்பட்டோர் வரையில் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்து வந்த நிலையில் இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் மட்டும் இதுவரை 6,750 பேர் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்துள்ளனர்.


அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மா சுப்பிரமணியன் பேசியதாவது


முதல் கண் வங்கி தொடங்கப்பட்டது இந்த எழும்பூர் அரசு கண் மருத்துவமனை. தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணைங்க 65 கோடி ரூபாயில் புதிய கட்டிடம் கட்டி தொடங்கி வைக்கப்பட்டது.


எடப்பாடி பழனிசாமி அறிக்கைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் ;


எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் ஒரு துறையில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும். அதிமுக காலத்தில் தொடர்ந்து மருத்துவர்கள் போராட்டம் நடத்தினார்கள் என்று 116 மருத்துவர்களுக்கு இடமாற்றம் கொடுத்தார்கள். எந்த அரசும் மருத்துவர்களுக்கு இதுபோன்று நடவடிக்கை எடுக்கவில்லை ஆனால் அதிமுக ஆட்சியில் இது போன்று நடைபெற்றது. அந்த 116 பேர் பணியிட மாற்றம் செய்ததன் எதிரொலியாக அதில் ஒரு மருத்துவர் மன உளைச்சல் காரணமாக உயிரிழந்து உள்ளார்.


கடந்த ஆட்சியில் 2000 பேரை முறையாக  ( மருத்துவத் துறையில் ) பணியில் அமர்த்தவில்லை. முதல் முறையாக பணி ஆணை பெறுபவர்களிடம் விருப்ப கலந்தாய்வு இதுவரைக்கும் எந்த ஆட்சியில் வழங்கப்படவில்லை. ஆனால் திமுக ஆட்சியில் மருத்துவர்களுக்கு எந்த பகுதியில் பணி வேண்டும் என்று கேட்டு அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றினோம்.


மருத்துவத்துறையில் பல்வேறு காலி பணியிடங்களுக்கு இதுவரை மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் என பலர் பணியமற்றப்பட்டுள்ளனர்.


கடந்த மூன்று ஆண்டுகளில் 6,744  மருத்துவத் துறையில் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. 36,000 பேருக்கு அவர்கள் விருப்பப்பட்ட இடத்தில் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.


அதிமுக ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளில் மருத்துவத்துறை‌யில் பணியமர்த்தப்பட்ட பணியாளர்கள் விவரங்களை, கலந்தாய்வு மூலம் பணி மாறுதல் அளித்த விவரங்களை எடப்பாடி பழனிசாமி சொல்ல வேண்டும்.


அவர் ஆட்சி காலத்தில் அவரும் அமைச்சர்களும் எந்தெந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்கள் என்ற விவரங்களும் எடப்பாடி பழனிசாமி தெரிவிக்க வேண்டும். இந்த ஆண்டு மட்டும் 12,120 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்  தற்போது வரை டெங்குவால் 5 பேர் இறந்துள்ளனர்.


தனியார் மருந்தக ஆய்வகங்களில் பரிசோதனை முடிவுகள் தவறாக இருக்கும் என எண்ணும் பட்சத்தில் தகவல் தெரிவித்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.