தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் வரும் 9ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய மூன்று ஒன்றியங்களில் காலை 7 மணிக்கு துவங்கியது. இந்நிலையில் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உள்ளாவூர் கிராமத்தில் 797 ஆண் வாக்காளர்களும் 807 பெண் வாக்காளர்களின் 1604 வாக்காளர்கள் வாக்கு பதிவு செய்ய ஏதுவாக 4 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்து.



 

இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் வாக்கு சாவடி நுழைவுவாயிலில் வேட்பாளர்களின் பெயர் சின்னம் உள்ளிட்ட விவரங்கள் ஒட்டப்படும். இதில் கிராம ஊராட்சி மன்ற தலைவர் போட்டியிடும் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் ஒட்டப்பட்டது . இதில் லட்சுமி என்பவர் பெயருக்கு  பதிலாக தனலட்சுமி என்பவர் போட்டியிடுவதாக அச்சடிக்கப்பட்டு நுழைவாயில் ஒட்டப்பட்டது. இந்த தவறான செயலை கண்டித்து வேட்பாளர் வாக்குசாவடி தேர்தல் அலுவலரிடம் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தற்போது வரை ஒரு வாக்கு கூட அந்த கிராமத்தில் பதிவாகவல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தேர்தல் அலுவலர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் காவல்துறையினர் என அனைவரும் வேட்பாளருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

 

காஞ்சிபுரம்

 

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கான முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில், 1,744 வாக்குச்சாவடியில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக பாதுகாப்பு பணியில் 4,250 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.  காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல், கடந்த மாதம் 13ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து  15ஆம் தேதியில் இருந்து 22 ஆம் தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டன. கூர்ந்தாய்வு முடிந்து 25ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஒரு வாரத்திற்கும் மேலாக வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தனர். 

 

காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை முதற்கட்டமாக காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய மூன்று ஒன்றியங்களில், 680 ஓட்டுச்சாடிகளில், இன்று ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இதில் பதற்றமான 255 ஓட்டுச்சாவடிகளில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. காஞ்சிபுரம் ஒன்றியத்தில் 1.05 லட்சம் வாக்காளர்கள், வாலாஜாபாத் ஒன்றியத்தில் 1.05 லட்சம் வாக்காளர்கள், உத்திரமேரூர் ஒன்றியத்தில் 1.04 லட்சம் வாக்காளர்கள், இன்று வாக்களிக்க உள்ளனர்.



 

செங்கல்பட்டு மாவட்டத்தில் லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், புனிததோமையார்மலை ஆகிய ஒன்றியங்களுக்கு, இன்று தேர்தல் நடக்கிறது. இங்குள்ள 1,064 ஓட்டுச்சாவடிகளுக்கு, 6,384 வாக்குப்பதிவு அலுவலர்கள் பணிபுரிய உள்ளனர்.  இவர்களுக்காக 680 ஓட்டுச்சாவடிகளில், 5,053 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். 72 பொருட்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தை 89 மண்டலங்களாக பிரித்து, மண்டல அலுவலர்கள் மூலம், வாக்குச்சாவடிக்கு தேவையான பொருட்கள் 91 வாகனங்களில் எடுத்து செல்லப்பட்டன.

 


 

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையில், மூன்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், ஏழு துணை காவல் கண்காணிப்பாளர்கள், 20 ஆய்வாளர்களும், 2,000 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதை தவிர 53 மொபைல்  காவல்துறையினர் தொடர்ந்து ரோந்து பணியில் இருப்பர். 30க்கும் மேற்பட்ட இடங்களில் தேர்தலன்று சோதனைச்சாவடிகள் செயல்பட உள்ளன. கூடுதல் தேவைக்காக 35 பேர் கொண்ட அதிரடிப் படையினரும் தயாராக உள்ளனர் . செங்கல்பட்டு  மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் மாவட்ட காவல்துறையினர் 1,000 பேரும், வெளிமாவட்ட காவல்துறையினர் 1,250 பேரும் என 2,250 போலீசார், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் நடைபெறும் பகுதியில், வாக்காளர்களை வாகனங்களில் அழைத்து வருவது உள்ளிட்ட வேலைகளுக்கு, தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.