Kuthambakkam Bus Terminus Latest News: சென்னை பூந்தமல்லி அருகே குத்தம்பாக்கம் பேருந்து நிலையம், ஜூன் மாதம் முதல் செயல்பாட்டிற்கு வரவுள்ளது.
குத்தம்பாக்கம் பேருந்து முனையம் (Kuthambakkam Moffesil Bus Terminal)
சென்னையில் தொடர்ந்து இட நெருக்கடி அதிகரித்து வருகிறது. இதனால் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு சென்னை புறநகர் பகுதிகளில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பூந்தமல்லி அருகே, குத்தம்பாக்கத்தில் 25 ஏக்கர் பரப்பளவில், சுமார் 427 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
என்னென்ன வசதிகள் உள்ளது ? Key Features Of Kuthambakkam Bus Stand
மாநகரப் பேருந்துகள், அரசு போக்குவரத்து பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகள் சென்று வர தனித்தனி வழிகள் இந்த பேருந்து நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கான வசதிகளும் செய்யப்பட உள்ளன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை போன்று,02000 இருசக்கர வாகனங்கள் மற்றும் 250 கார்கள் நிறுத்துவதற்கான வசதிகள், வாகன நிறுத்தும் இடத்தில் செய்யப்பட உள்ளன.
குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தில், 41 கடைகள், 8 டிக்கெட் கவுண்டர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு என தனி கழிப்பறை வசதிகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட உள்ளன. 70 வெளியூர் அரசு பேருந்துகளும், 30 ஆம்னி பேருந்துகளும் ஒரே நேரத்தில் நிறுத்தி வைக்க முடியும்.
தமிழ்நாட்டில் முதல் முறை..
மேலும், பணிமனையில் 36 மாநகர பேருந்துகள், 27 ஆம்னி பேருந்துகள் நிறுத்தி வைப்பதற்கான இட வசதிகள் உள்ளன. மாநிலத்திலே முதல்முறையாக குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறை வசதியும் செய்யப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயன்பாட்டிற்கு வருவது எப்போது ? kuthambakkam Bus Stand Open
குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டுமான முடிவடைந்துள்ளது. இறுதி கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் மாதம் அனைத்து பணிகளும் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் வரும் ஜூன் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதற்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் பேருந்துகள் இயக்குவது குறித்த ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.