முதலமைச்சர் ஸ்டாலின் நலம்பெற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


முன்னதாக பிரதமர் மோடி முதலமைச்சர் ஸ்டாலினிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவரது உடல் நலன் குறித்து விசாரித்துள்ளார். 


 






தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த ஜூலை 12ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்திருந்தார். மேலும் அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.


 






தொடர்ந்து அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் மேலும் சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என காவேரி மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


 






இந்நிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் உடல்நலம் பெற வாழ்த்திய கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, ”முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் குணமடைந்து மாநில மக்களுக்கு சேவை செய்ய வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 


மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சிகிச்சைப் பெற்று வரும் முதலமைச்சர் ஸ்டாலினிடம் தொலைபேசி மூலம் உடல்நலன் குறித்து கேட்டறிந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண