"6000 சிசிடிவி கேமராக்கள்"

 

இன்று பிறந்த ஆங்கில புத்தாண்டை ஒட்டி நேற்று மாலை 6 மணி முதல் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து காவல் பணியில் ஈடுபட்டனர். இதற்கு முன்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் , காஞ்சிபுரம் மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட காவல் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு காவல் பணியில் ஈடுபட உள்ளதாகவும், மாவட்டம் முழுவதும் 6 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணியில் காவல்துறை ஈடுபட உள்ளதாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களை ஓட்டுவதும் ரேஸ் பந்தயத்தில் ஈடுபடுவதும் அறிய வந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்து பாதுகாப்பான முறையில் புத்தாண்டை கொண்டாட அனைவருக்கும் அறிவுறுத்தினார்



 

"காவலர்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்"

 

அவ்வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர், கோட்டக் காவல் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள் காவலர்கள் என அனைவரும் மாவட்ட முழுவதும் சாலையில் செல்லும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் அத்துமீறும் வாகனங்களை பறிமுதல் செய்து ஒழுங்கு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அவ்வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் காஞ்சிபுரம் பேருந்து நிலைய சிக்னல் அருகே காவல் பணியில் ஈடுபட்ட காவலர்கள் உடன் இணைந்து பணிகளை கண்காணித்து வந்தார்.

 



" வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் "

 

சரியாக 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததை ஒட்டி பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பொதுமக்கள் சாலை வழியாக வந்த மக்கள் மற்றும் பேருந்து ஓட்டுனர் ஆட்டோ ஓட்டுநர்கள் வெளிநாட்டு பயணிகள் என அனைவரும் இணைந்து சாலையில் பிரமாண்ட கேக் வெட்டி அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தும்,  அவர்களுக்கு கேக் இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார். மேலும் காவல் கண்காணிப்பாளர் எம் சுதாகர் கூறுகையில் , புத்தாண்டுக்கு பொதுமக்களுக்கு தெரிவித்த நெறிமுறைகளை கடைபிடித்து எந்த ஒரு பெரிய அசம்பாவிதமும் நிகழாமல் புத்தாண்டை எளிமையாக முறையிலும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.



 

"திடீரென  கொண்டாடிய எஸ்பி"

இச்செயலுக்கு உறுதுணையாக காவல் பணியில் ஈடுபட்ட அனைத்து காவல் துறையினருக்கும் அதற்கு பெரிதும் ஒத்துழைத்த பொதுமக்களுக்கும் இத்தருணத்தில் நன்றி தெரிவித்ததாகவும் கூறினார். மேலும் மகிழ்ச்சி என்பது அனைவரிடத்திலும் வெளிப்பட வேண்டிய விஷயம் எனவும் அதனைதான் பொதுமக்களுடன் காவல்துறையின் உறவு மேம்படும் வகையில், இந்நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டது எனவும் தெரிவித்தார். சாலை சந்திப்பில் வாகன சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் திடீர் என எஸ்.பி.சுதாகர் பொதுமக்களுடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சி அளித்தது.