தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அமைக்கப்பட்ட இயந்திரங்களை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, காஞ்சிபுரம் எம்பி க.செல்வம் துவக்கி வைத்தனர்.

 

பிளாஸ்டிக் இல்லா மாவட்டம் 

 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக உருவாக்கிடும் வகையில் பல்வேறு விதமான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை நிறுத்தும் வகையில், மீண்டும் மஞ்சள் பை பயன்பாட்டினை கொண்டுவர பொதுமக்களிடையே  விழிப்புணர்வை  ஏற்படுத்தும் வகையில் 10 ரூபாய்க்கு மஞ்சள் பைகளை வழங்கிடும் இயந்திரங்களை அமைத்து வருகின்றனர்.

 

மஞ்சள் பை இயந்திரம் 

 

கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதிக அளவில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில், வரதராஜ பெருமாள் திருக்கோவில் ஆகிய இரு இடங்களில் மஞ்சள் பை இயந்திரங்களை வைத்து திறப்பு விழா நேற்று நடைபெற்றது. மஞ்சள் பை இயந்திரம் திறப்பு விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா ஆர்த்தி காஞ்சிபுரம் எம்பி கா. செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் மஞ்சள் பை இயந்திரங்களை துவக்கி வைத்தனர்.



 

தானியங்கி மஞ்சப்பை இயந்திரம்


காஞ்சிபுரம் மாவட்டமாக மாற்ற காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் நடத்தும் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வின் அங்கமாக திருத்தலங்களில் நெகிழியை உபயோகப்படுத்துவதை தடுக்கும் பொருட்டு தானியங்கி மஞ்சப்பை இயந்திரத்தை  மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா. ஆர்த்தி, திறந்து வைத்து, அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கி பேசியதாவது: தற்பொழுது காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோவில் மற்றும் வரதராஜ பெருமாள் திருக்கோவில் ஆகிய திருக்கோவில்களில்,  தானியங்கி மஞ்சப்பை இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. மேலும் பொது மக்கள் நெகிழியை பயன்படுத்தாதவாறு,  மஞ்சப்பையை பயன்படுத்தும் விதமாக மக்கள் அதிகம் கூடும் இடமான மார்க்கெட் பகுதிகளில், மேலும் தானியங்கி மஞ்சப்பை இயந்திரம் நிறுவப்படும். எனவே பொதுமக்கள் அனைவரும் மஞ்சப்பையை பயன்படுத்தும்மாறு கேட்டுக்கொண்டார்.





 

விழாவில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி, துணை ஆணையர் லட்சுமி காந்தன் பாரதி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் கு.பிரகாஷ் மற்றும் மாசுக்கட்டுப்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.