சென்னை மெட்ரோ ரயிலில் பெட்டிகளின் எண்ணிக்கையை 4கிலிருந்து 6ஆக உயர்த்த சென்னை மெட்ரோ ரயில் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. 


சென்னை மெட்ரோ ரயிலில் 3 பொது பெட்டி மற்றும் ஒரு மகளிர் பெட்டி இருந்த நிலையில் கூடுதலாக 2 பெட்டிகள் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளன. மெட்ரோ ரயிலில் பெட்டிகளை அதிகரிக்கும் சாத்தியம் குறித்து அறிக்கை தயார் செய்யப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பணி முடிந்து விரிவாக்கப்பட்ட மெட்ரோ ரயில் நடைமுறைக்கு வர 1.5 ஆண்டுகள் முதல் 2 ஆண்டுகள் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது