பட்டா என்பது என்ன ?
 
பட்டா என்பது தமிழ்நாட்டில் வருவாய்த் துறையால் நிலத்தின் உரிமையாளருக்கு வழங்கப்படும் அதிகாரப்பூர்வ ஆவணமாகும். இது அந்த நிலம் யாருக்குச் சொந்தமானது என்பதையும் , சர்வே எண், நிலத்தின் வகை , அளவு மற்றும் வரி விவரங்கள் போன்ற முக்கியத் தகவல்களையும் கொண்டுள்ளது. நில உரிமையைச் சரிபார்க்க பட்டா ஒரு சட்டபூர்வமான ஆவணமாகச் செயல்படுகிறது. 
 
பட்டாவின் முக்கிய அம்சங்கள் ;
 
1. இது நிலத்தின் சட்டபூர்வமான உரிமையாளரின் பெயரை உறுதிப்படுத்தும் ஒரு சான்றிதழ். 
 
2. அதில் நிலத்தின் சர்வே எண் , சர்வே உட்பிரிவு எண் , நிலத்தின் பரப்பளவு , நிலத்தின் வகை (விவசாயம் அல்லது விவசாயம் அல்லாதது) , மற்றும் உரிமையாளரின் தந்தை பெயர் போன்ற விவரங்கள் அடங்கும். 
 
3. தமிழ்நாட்டில் , வருவாய் துறை மூலம் வழங்கப்படும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களில் பட்டாவும் ஒன்று. 
 
4. நிலம் வாங்குவது, விற்பது அல்லது வாரிசுரிமை போன்ற சொத்து தொடர்பான பரிவர்த்தனைகளில் பட்டா ஒரு அத்தியாவசிய ஆவணமாகும். 
 
பட்டா - வில் எத்தனை வகைகள் உள்ளன 
 
1. உரிமைப் பட்டா (UDR Patta)
 
2. நத்தம் பட்டா
 
3. 2C பட்டா (மரப் பட்டா),
 
4. தோராயப் பட்டா,
 
5. தூய பட்டா,
 
6. கையேடு பட்டா (Manual Patta)
 
7. நில ஒப்படைப்பு பட்டா 
 
8. கூட்டுப் பட்டா 
 
இவைகள் முக்கிய பட்டாக்களாக உள்ளன.
 பட்டா வகைகள் விபரம் ; 
 
1. உரிமைப் பட்டா ;
 
நிலத்தை கணினியில் பதிவு செய்யும் செயல்முறையின் மூலம் வழங்கப்படும் பட்டா இது. 
 
2. நத்தம் பட்டா ;
 
கிராமங்களில் அரசுக்குச் சொந்தமான 'நத்தம்' என வகைப்படுத்தப்பட்ட புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு வழங்கப்படும் பட்டா இது.
 
3. 2C பட்டா ( மரப் பட்டா ) ; 
 
அரசின் புறம்போக்கு நிலங்களில் மரங்களை நட்டுப் பராமரிப்பவர்களுக்கு வழங்கப்படும் பட்டா. 
 
4. தோராயப் பட்டா ; 
 
நத்தம் நிலங்களுக்கு வழங்கப்படும் ஆரம்பகட்ட பட்டா இது.
 
5. தூய பட்டா ; 
 
நத்தம் நிலங்களுக்கு தோராயப் பட்டாவிற்குப் பிறகு வழங்கப்படும் இறுதி பட்டா. 
 
6. கையேடு பட்டா (Manual Patta) ;
 
தற்போது நில உடைமை பரிவர்த்தனைகளில் பெயர்களைச் சேர்த்தல் , மாற்றுதல் , புல எண்ணை மாற்றுதல் போன்ற வேலைகளுக்குப் பயன்படுத்தப்படும் பட்டா. 
 
7. நில ஒப்படைப்பு பட்டா (Assignment Land) ; 
 
அரசு நிலங்களை குறிப்பிட்ட நபர்களுக்கு குறிப்பிட்ட நோக்கங்களுக்காக ஒதுக்கி வழங்கும் பட்டா.
 
8. கூட்டுப் பட்டா ;
 
ஒரு நிலத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட உரிமையாளர்கள் இருக்கும் பட்சத்தில் வழங்கப்படும் பட்டா. 
 
சொத்துகளுக்கு பட்டா பெயர் மாற்றம்

தமிழகத்தில் வீடு , மனை போன்ற சொத்துக்களுக்கு பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கான வழிமுறைகளை எளிதாக்க , அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சில ஆண்டுகள் முன்பு வரை சொத்து வாங்குவோர் , சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் வழி முறை இருந்தது.

Continues below advertisement

இதற்கு உரிய கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தாலும்,  பட்டா பெயர் மாற்றப் பணிகள் முறையாக நடக்கவில்லை என புகார் எழுந்தது. இந்நிலையில் மேனுவல் முறையில் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் பெறுவது நிறுத்தப்பட்டது.

இ - சேவை மூலமாக விண்ணப்பம்

Continues below advertisement

இதையடுத்து சொத்து வாங்குவோர் அதற்கான பட்டா பெயர் மாற்றம் தேவைப்படும் நிலையில் , மக்கள் அந்தந்த பகுதியில் உள்ள இ-சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பங்களை அளிக்கலாம். இங்கு 60 ரூபாய் கட்டணம் செலுத்தினால் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் பதிவு செய்யலாம்.

இந்த விண்ணப்பங்கள் பெயர் மாற்றம் மட்டும் என்றால் கிராம நிர்வாக அலுவலருக்கும் , நிலத்தின் சர்வே எண் உட்பிரிவு தேவை எனில் நில அளவையாளருக்கும் ஆன்லைன் வாயிலாக அனுப்பப்படும்.

விண்ணப்பித்த 30 நாட்களில் முடிவு

இணைக்கப்பட்டுள்ள சொத்து தொடர்பான தாய் பத்திரம் , தற்போது பதிவான பத்திரம் , பழைய பட்டா , நில வரைபடம் போன்ற விபரங்கள் ஆய்வு செய்யப்படும். மேல் கூடுதல் இதற்கு விபரங்கள் தேவைப்பட்டால் விண்ணப்பதாரரை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தொடர்பு கொண்டு கேட்பர்.

இது போன்று விண்ணப்பங்களை பதிவு செய்யும் போது சரியான மொபைல் போன் எண் , இ - மெயில் , முகவரி போன்ற விபரங்களை அளிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர் கள், 30 நாட்களில் முடிவு எடுக்க வேண்டும்.

கிராம நிர்வாக அலுவலர் To தாசில்தார்

சம்பந்தப்பட்ட அலுவலர்கள் , 30 நாட்களில் முடிவு எடுக்காத நிலையில் , அவருக்கு மேல் அதிகாரி யார் என்று பார்த்து முறையிட வேண்டும். பெரும்பாலும் பட்டா பெயர் மாற்ற விவகாரங்களில் கிராம நிர்வாக அலுவலர் நிலையில் இருந்து முடிவுகள் வராத நிலையில் தாசில்தாரிடம் முறையிடலாம்.

அப்போதும் தீர்வு கிடைக்காத நிலையில் மக்கள் இது அணுகுவதற்கும் வழிவகை உள்ளது. பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் வேண்டு மென்றே கிடப்பில் போடப்படுகிறது. உரிய காரணம் இன்றி நிராகரிக்கப்படுகிறது. என்றால், அது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யவும் மக்களுக்கு உரிமை உள்ளது.  எனவே பட்டா மாறுதல் விண்ணப்பங்களை முறையாக தாக்கல் செய்தும் அதிகாரிகள் ஏற்காத நிலையில் , நீதிமன்றங்களை அணுகலாம் என்கின்றனர் இத்துறை வல்லுனர்கள்.