Just In





பெண்கள் குறித்து அவதூறு பேச்சு; கண்துடைப்பு நாடகம் - எச்.ராஜா
இந்து விரோத தீய சக்தி திமுவை 2026 சட்டமன்ற தேர்தலில் தோற்கடிப்போம். இந்துக்கள் அனைவரும் திமுகவை தோற்கடிப்போம் என உறுதி ஏற்க வேண்டும்.

அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்
சென்னை தி.நகரில் உள்ள பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அதன் தேசிய செயலாளர் எஸ்.ராஜா செய்தியாளர்களிடம் பேசும் போது, இந்து மதத்தை இழிவு படுத்தும் நோக்கோடும், பெண்களை அவதூறாக பேசி இருக்கும் பொன்முடி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்.
கட்சி பதவியில் இருந்து நீக்கி இருப்பது கண்துடைப்பு நாடகம். பொன்முடி உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். வைணவம் , சைவம் ஆகிய இரண்டு மதத்தை இழிவாக பேசி இருக்கிறார். பொன்முடி மீதான வழக்கு தொடர வேண்டும்.
இந்துக்கள் உறுதி ஏற்க வேண்டும்
திமுகவில் இருந்து இந்து விரோதத்தை மாற்ற முடியாது. இந்து விரோத தீய சக்தி திமுவை 2026 சட்டமன்ற தேர்தலில் தோற்கடிப்போம். இந்துக்கள் அனைவரும் திமுகவை தோற்கடிப்போம் என உறுதி ஏற்க வேண்டும். கொள்கைக்காக சித்தாந்ததிற்காக அண்ணாமலை செயல்பட்டு வந்தார். இனியும் அப்படியே செயல்படுவார்.
தமிழகத்தை போதை இடமாக மாற்றி இருக்கும் திமுகவை தோற்கடிக்க பாஜக எல்லா தலைவர்களையும் ஒன்று சேர்த்து செயல்படுவோம். இன்று மூத்த நிர்வாகிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து கையெழுத்து போட்டு மாநில தலைவர் பதவிக்கு நயினார்க்கு முன்மொழிந்து இருக்கோம். 5 விரலையும் சேர்ந்தால் தான் வலிமை கிடைக்குமோ அதே போன்று ஒன்று சேர்ந்து செய்வோம். கூட்டணி பற்றி மாநிலத்தில் யாரும் பேச மாட்டோம். தேசியத்தில் தான் முடிவு செய்வார்கள். 35 ஆண்டுகளாக பாஜகவில் இருக்கிறேன். தேர்தல் கூட்டணியை மாநிலம் முடிவு செய்தது இல்லை என தெரிவித்தார்.