செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி மனோகர். இவரது மகள் ரக்சயா(20), கல்லூரி படிப்பை முடித்துள்ளார். தன்னுடைய சிறு வயது முதல் தான் அழகிப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்தோடு, குடும்ப வறுமையையும் பொருட்படுத்தாமல் தனது சொந்த முயற்சியில் பகுதி நேர வேலை செய்து தன்னை தயார்படுத்தி கொண்டார். கடந்த 2018-ஆம் ஆண்டு நடந்த மோனோ ஆக்டிங் நிகழ்வில் கலந்துகொண்டு வெற்றி பெற்று அரசு சார்பில் மலேசியா அழைத்து சென்று கெளரவித்தனர்.



 

அதன் முயற்சியாக கடந்த பிப்ரவரி மாதம் Forever Star India Awards நடத்திய மாவட்ட அளவிலான அழகிகள் போட்டியில் தேர்வாகி,  பின்னர் மாநில அளவிலான போட்டி ஜெய்ப்பூரில் கடந்த செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதி முதல் 21-ஆம் வரை நடந்த போட்டியில் ஆயிரக்கணக்கானோர், இந்தியா முழுவதிலும் இருந்து வந்து கலந்து கொண்டதில், தமிழகத்தை சேர்ந்த இளம்பெண் மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். அதேபோல் அனைத்து மாநிலங்களிலும் வின்னர், ரன்னர் என சுமார் 75 பேர் இறுதிப் போட்டிக்கு தேர்வாகினர். இதனை அடுத்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியிலும் கலந்து கொண்டார்.



ஃபாரெவர் ஸ்டார் இந்தியா அவார்ட்ஸ் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட இந்த அழகிப் போட்டியில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து 75 பேர் பங்கேற்றனர். இதில் இரண்டாவது இடத்தை பிடித்தர் ரக்சயா. சிறு வயது முதலே அழகி போட்டியில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்தை கொண்டிருந்த அவர் மிஸ் தமிழ்நாடு போட்டியில் வெற்றி பெற்று, மிஸ் இந்தியா போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


.