மின்னனு கழிவு (மேலாண்மை) விதிகள் 2016,விதி 21-ன்படி இவ்விதிகள் மீறப்பட்டால் மின் பொருள் உற்பத்தியாளர்கள், தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்கள், மின் கழிவு இடமாற்றம் செய்வோர், பிரித்தெடுப்போர் மற்றும் மறுசுழற்சி செய்வோர் ஆகியோருக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம்,1986-ன் கீழ் தமிழ்நாடு மாசுகட்டுபாட்டு வாரியத்தால் அபராதம் விதிக்கப்படும் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது பின்வருமாறு,




மின்-கழிவு புதுப்பிப்பாளர்களுக்கு அனுப்ப வேண்டும்.


சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம், இந்திய அரசின் மின்னனு கழிவு (மேலாண்மை) விதிகள் 2016ஐ 23.3.2016 அன்று அறிவித்தது, இந்தவிதிகள் அக்டோபர் 1, 2016 முதல் நடைமுறைபடுத்தப்பட்டது. மின்-கழிவு (மேலாண்மை) விதிகள், 2016-ன்கீழ், அங்கீகரிக்கப்பட்ட மின்-கழிவுகளை பிரித்தெடுப்போர், மின்-கழிவுகளை மறுசுழற்சி செய்பவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மின்-கழிவு புதுப்பிப்பாளர்களால் மட்டுமே மின்கழிவுகளைச் சேகரித்து செயலாக்க முடியும் மேலும் நடுவண் மாசுகட்டுபாடு வாரியத்திடம் நீட்டிக்கபட்ட உற்பத்தியாளர் பொறுப்பு சான்றிதழ் பெற்ற உற்பத்தியாளர்கள் மின்-கழிவுகளை சேகரித்து அதனை அங்கீகரிக்கப்பட்ட மின்-கழிவுகளை பிரித்தெடுப்போர், மின்-கழிவுகளை மறுசுழற்சி செய்பவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மின்-கழிவு புதுப்பிப்பாளர்களுக்கு அனுப்ப வேண்டும்.




மாசுகட்டுப்பாட்டு வாரியத்தால் அபராதம் விதிக்கப்படும்.


 மின்னணு கழிவு (மேலாண்மை) விதிகள் 2016, விதி 24-ன்படி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் கைவிடப்பட்ட மின்-கழிவுபொருட்களைச் சேகரித்து, அங்கீகரிக்கப்பட்ட மின்-கழிவுகளை பிரித்தெடுப்போர்கள் அல்லது மின்-கழிவுகளை மறுசுழற்சி செய்பவருக்கு அனுப்ப வேண்டும். முறைசாரா வர்த்தகம், அறிவியல் பூர்வமற்ற செயலாக்கம் மற்றும் மின்கழிவுகளை எரித்தல் போன்ற சம்பவங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பொதுமக்களின் குறைகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களின் மூலம் மின்-கழிவுகளை அறிவியல் பூர்வமற்ற முறையில் பதப்படுத்துதல் மற்றும் எரித்தல் ஆகியவை மனித ஆரோக்கியத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.


மின்னணு கழிவு (மேலாண்மை) விதிகள் 2016,விதி 21-ன்படி இவ்விதிகள் மீறப்பட்டால் மின் பொருள் உற்பத்தியாளர்கள், தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்கள், மின் கழிவு இடமாற்றம் செய்வோர், பிரித்தெடுப்போர் மற்றும் மறுசுழற்சி செய்வோர் ஆகியோருக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம்,1986-ன் கீழ் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தால் அபராதம் விதிக்கப்படும்.


 5 ஆண்டுகள் வரை சிறை


எனவே இவ்வகையான செயல்களில் ஈடுபடும் மின்கழிவு கையாளுபவர்கள் மீது சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986 இன் பிரிவு 5-ன் படி அந்நிறுவனத்தை மூடிடவும் அல்லது அந்நிறுவனத்தில் மின்சாரம், நீர் அல்லது வேறு ஏதேனும் சேவையை நிறுத்தவும் அதிகாரம் வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும் அச்சட்டத்தின் பிரிவு 15-ன் கீழ் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்படும்.




மேலும், பொதுமக்கள் மற்றும் மின்கழிவுகளை கையாளுபவர்கள், மின்-கழிவுகளை எரிக்கவோ மற்றும் முறைசாரா வர்த்தகத்தைத் தவிர்க்குமாறும், மேலும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அல்லது மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதலுக்குப் பிறகு செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், பொதுமக்கள் சட்டவிரோதமாக அல்லது முறைசாரா செயலாக்கத்தைத் தடுக்கும்பொருட்டு மின்-கழிவுகளை அங்கீகரிக்கப்பட்ட பிரித்தெடுப்போர் மற்றும் மறுசுழற்சி செய்பவர்களிடம் திரும்ப ஒப்படைக்குமாறு வலியுறுத்தப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.ர.ராகுல் நாத்  தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண