இ - சேவை மூலம் விண்ணப்பம்

Continues below advertisement


தமிழகத்தில் சொத்து வாங்குவோர் , பட்டாவில் பெயர் மாற்றம் செய்யவும், வாரிசு சான்றிதழ் , இருப்பிட சான்றிதழ் , ஜாதி சான்றிதழ் போன்றவற்றை பெறவும் , இ - சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கின்றனர். இந்த விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட அலுவ டலர்களுக்கு ஆன்லைன் முறையில் அனுப்பப்படும்.


இது தொடர்பாக , சம்பந்தப்பட்ட அலுவலர்கள் 30 நாட்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்ற விதி உள்ளது. அதற்கு மேல் விண்ணப்பம் நிலுவையில் இருந்தால் , சம்பந்தப்பட்ட அலுவலர் விளக்கம் அளிக்க வேண்டிய நிலை ஏற்படும்.


முடிவு எடுக்காமல் நிராகரிப்பு


இருப்பினும் பெரும்பாலான இடங்களில் , பட்டா மாறுதல் உள்ளிட்ட விண்ணப்பங்கள் மீது அதிகாரிகள் , 30 நாட்களில் முடிவு எடுக்காமல் நிராகரிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனால் பொது மக்கள் மீண்டும் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.


இந்நிலையில் " உங்களுடன் ஸ்டாலின் " திட்டத்துக்காக முகாம்கள் நடத்தப்பட்டு , பொதுமக்களிடம் பட்டா மாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக மனுக்கள் பெறப்படுகின்றன.


இந்த மனுக்களை ஆன்லைன் முறையில் பதிவேற்றம் செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தர விடப்பட்டுள்ளது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது முடிவு எடுக்க , 45 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.


இதை சுட்டிக்காட்டி , 'இ - சேவை' மையங்கள் வாயிலாக பெறப்படும். மனுக்கள் மீதான நடவடிக்கைக்கும் 45 நாட்கள் வரை அவகாசம் அளிக்க வேண்டும் என , வருவாய் துறை அலுவலர்கள் கோரிக்கை விடுத்தனர்.


அதை ஏற்ற வருவாய் துறை உயரதிகாரிகள் , பட்டாவில் பெயர் மாற்றம் , வாரிசு சான்றிதழ் , ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க , 45 நாட்கள் வரை அவகாசம் அளித்து சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.


இதுகுறித்து , வருவாய் துறை அதிகாரி கூறியதாவது ; 


உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைக்கு கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் வழக்கமான மனுக்களுக்கும் 45 நாட்கள் வரை கூடுதல் அவகாசம் கிடைத்துள்ளது. அதே நேரம் உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான , 45 நாட்கள் அவகாசத்தை 60 நாட்களாக நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் துறையின் பரிசீலனையில் உள்ளது என இவ்வாறு கூறினார்.