மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்தில், பெண் பயணிக்கு கட்டணமில்லா பயணச்சீட்டு வழங்காமல், பணியில் ஒழுங்கீனமாக நடந்துக் கொண்ட காரணத்தால் நடத்துநர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


ஒழுங்கீனமாக நடந்து கொண்ட நடத்துநர்:


இது தொடர்பாக மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாம் தகவல் தெரிவிக்கையில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், திருவொற்றியூர் பணிமனையைச் சார்ந்த நடத்துநர்  சிவசுதன் பணி இருந்த போது, சென்ட்ரல் பேருந்து நிறுத்தத்தில் ஏறிய பெண் பயணிக்கு கட்டணமில்லா பயணச்சீட்டு வழங்காமல் இருந்துள்ளார். மேலும், தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக செய்தி வெளியானது.


தற்காலிக பணி நீக்கம்:


இதைத்தொடர்ந்து, நடத்துநர் சிவசுதன் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தற்காலிக பணி நீக்கம் செய்திட மேலாண் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்





பொதுமக்களுக்கு எந்த குறைவின்றி சேவை ஆற்றும் பணியில் மாநகர் போக்குவரத்துக் கழகம் ஈடுபட்டு வருகிறது. எனவே, பொது மக்களிடம் மரியாதையுடனும், கண்ணியத்துடனும், பேசும்போது கவனத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் எனவும், கவனக்குறைவாக செயல்படும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேலாண் இயக்குநர் தெரிவித்தார்.