வண்டலூர் உயிரியல் பூங்கா டிக்கெட்டுகளின் விலை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவு வந்தவுடன் இது விரைவில் செயல்படுத்தப்படும் என தகவல்


வண்டலூர் உயிரியல் பூங்கா ( Arignar Anna Zoological Park )


சென்னை புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் முக்கிய சுற்றுலா தளமாக, அறிஞர் அண்ணா வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்ளூர், வெளியூர் , வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உயிரியல் பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வரும் விலங்குகளை கண்டு ரசிக்கின்றனர். விடுமுறை நாட்கள் மற்றும் கோடை விடுமுறை போன்ற தினங்களில் வழக்கத்தை விட மூன்றிலிருந்து , நான்கு மடங்கு அதிக அளவு மக்கள் உயிரியல் பூங்காவிற்கு வருகை புரிவது வழக்கம். 




2000 விலங்குகள் ( Vandalur Zoo Animals )


வண்டலூர் பூங்காவில் வெள்ளைப் புலிகள், வங்க புலிகள், சிங்கம், சிறுத்தை உள்ளிட்ட சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. மேலும் வண்ணத்துப் பூச்சி பூங்கா, மீன் கண்காட்சியகம், குழந்தைகள் பூங்கா, இரவு நேர விலங்குகள் பூங்கா, பாம்புகள் இருப்பிடம் என தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன. தற்போது கோடை விடுமுறை என்பதால், வண்டலூர் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


இந்தியாவில் இருக்கும் உயிரியல் பூங்காக்களில், சிறந்த பூங்கா என்ற விருதையும் வண்டலூர் உயிரியல் பூங்கா பெற்றுள்ளது. 


கட்டண உயர்வு ( Vandalur Zoo Entry Fee )


பூங்காவை சுற்றிபார்க்க டிக்கெட் கட்டணமாக ரூ.90 வசூலிக்கப்படுகிறது. இதை உயர்த்தி  ரூ.200 நுழைவு கட்டணம் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று வெளிநாட்டில் இருந்து, வரும் சுற்றுலா பயணிகளுக்கும் நுழைவு கட்டண விலை உயர உள்ளது.  இந்த கட்டண உயர்வு ஒரு வாரத்திற்கு உள்ளாக, அமலுக்கு வர உள்ளது. 4 ஆண்டுகளுக்கு பிறகு கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று இதர சேவைக்கான கட்டணங்களும் உயர்த்தப்பட போவதாக தகவல் வெளியாகி உள்ளது


அதிகரிக்கும் பராமரிப்பு செலவு



விலங்குகள் பராமரிப்பு மற்றும் ஊழியர்களின் சம்பளம் ஆகியவற்றிற்கு வருடத்திற்கு 13 கோடி ரூபாய் வரை தேவைப்படுவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ,  பல்வேறு விலங்குகளின் பராமரிப்பு செலவும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த விலை உயர்வு கொண்டுவரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




பூங்கா நுழைவு கட்டணம் கடந்து வந்த பாதை


2017-ஆம் ஆண்டு வரை வண்டலூர் உயிரியல் பூங்காவில் பெரியவருக்கான நுழைவு கட்டணம் 30 ரூபாய் இருந்தது. அதன் பிறகு படிப்படியாக உயர்த்தப்பட்ட கட்டணம் , 2020 நவம்பர் மாதம் முதல் 90 ரூபாயாக இருந்து வருகிறது. இந்த நிலையில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண