Today Powercut : சென்னையில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா..? இதை முதல்ல படிங்க..!

Today Powercut : சென்னையில் இன்று பொன்னேரி மற்றும் பெரம்பூர் பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது.

Continues below advertisement

மின்சாரம் தடையின்றி விநியோகிப்பதை உறுதி செய்வதற்காக மாதந்தோறும் அந்தந்த பகுதிகளில் மின் உபகரணங்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

Continues below advertisement

இந்த நிலையில், சென்னையில் இன்று பெரம்பூர் மற்றும் பொன்னேரி பகுதிகளில் மின்பராமரிப்பு பணி காரணமாக மின்தடை செய்யப்பட உள்ளது.

பெரம்பூர் :

பெரியார் நகர், பெரியார் நகர் 1,2,3 மற்றும் 4வது தெருக்கள், சந்திரசேகரன் சாலை, கந்தசாமி சாலை, ஐ.சி.எஃப் காந்தி நகர், யுனிடைட் இந்தியா நகர் அனைத்து தெருக்கள், மார்க்கெட் தெரு, முத்தமிழ் நகர் 7வது பிளாக்

பொன்னேரி :

இருளிப்பட்டு, அழிஞ்சிவாக்கம், அத்திபேடு, ஜனபஞ்சாத்ரம், பெரியபாளையம் சாலை, சாய்கிருபாநகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

மேற்கண்ட பகுதிகளில் மின்பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது. சில பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மாலை 5 மணி வரை நடைபெறும் என்பதால் மின்தடை 5 மணி வரைகூட செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

இதனால், பொதுமக்கள், பணிக்கு செல்வோர் தங்களது செல்போன்களுக்கு சார்ஜ் போடுதல் மற்றும் இதர மின்சாரம் தொடர்பான பணிகளை மின்தடைக்கு முன்பே மேற்கொள்வது நல்லது.


தமிழ்நாட்டில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் கடந்த 10-ந் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் 2026ம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தின் படி  முதல் 100 யூனிட்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லை என்ற நிலை தொடரும். அதன்பின்னர் 200 யூனிட்டுகளுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 27.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல்  300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு 72.50 ரூபாய் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 400 யூனிட் வரை பயன்படுத்தோவருக்கு மாதம் ஒன்றுக்கு 147.50 ரூபாய் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

மின் பயன்பாடு கூடுதல் கட்டணம் (2 மாதங்களுக்கு):
200 யூனிட் 55 ரூபாய்
300 யூனிட் 145 ரூபாய்
400 யூனிட் 295 ரூபாய்
500 யூனிட் 310 ரூபாய்
600 யூனிட் 550 ரூபாய்
700 யூனிட் 595 ரூபாய்
800 யூனிட் 790 ரூபாய்
900 யூனிட் 1,130 ரூபாய்

இந்தக் கட்டண உயர்வு அனைத்தும் வரும் 2026-27 வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடில் கடைசியாக 2014ஆம் ஆண்டு மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் மின்சார வாரியத்தின் கடன் பாக்கி எவ்வளவு?

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிலுவை தொகை தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த மாதம் பேசினார். அப்போது, “தமிழக மின்சார வாரியம் இந்த வருடம் ஏற்பட்ட தொகை மட்டுமல்லாது, கடந்த பல ஆண்டுகளாக நிலுவைத் தொகையும் சேர்த்து ஏறத்தாழ 17,343 கோடி அளவிற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் மின் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய தொகை 48 மாதங்களாக பிரித்து வட்டியுடன் சேர்த்து கணக்கிடப்பட்டு, ஒரு மாதத்திற்கு ஏறத்தாழ 361 கோடி என்ற அளவில் 48 மாதங்களாக மின் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை, கடந்த மாதம் வழங்க வேண்டிய தொகை 4ஆம் தேதியே வழங்கி முடிக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

Continues below advertisement