Chennai Power Shutdown: சென்னையில் நாளை மாத பராமரிப்பு பணி காரணமாக நகரின் சில இடங்களில்  மின் தடை செய்யப்படுவது வழக்கம். மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யும் தமிழ்நாடு மின்சார வாரியம் மாதந்தோறும் இந்த மின் தடையை செய்து பராமரிப்பு பணிகளை மேற்க்கொண்டு வருகிறது. 

சென்னையில் நாளை மின்தடை: 23.06.2025

இந்நிலையில், நாளை(23.06.2025) சென்னையில் மாநகராட்சியில்  பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடை செய்யப்படும் எனற  அறிவிப்பை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

இதனால், பராமரிப்பு பணிகளுக்காக திங்கட்கிழமை (23.06.2025) காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மின் தடை செய்யப்படும் பகுதிகள்:

தாம்பரம்:
எம்இஎஸ் ரோடு, ஜிஎஸ்டி ரோடு, காந்தி ரோடு, ரங்கநாதபுரம், இரும்புலியூர் சர்வீஸ் ரோடு, இன்விகான் பிளாட், டிடிகே நகர், ஜெருசலேம் நகர், சர்ச் ரோடு, ரத்ன குமார் அவென்யூ, மருதம் ஹவுசிங், ஏஎஸ் ராஜன் நகர், ஜிகே மூப்பனார் அவென்யூ, சிட்லபாக்கம் ஜோதி நகர், சிட்லபாக்கம், கன்னடசாலை, ராமச்சந்திரய்யா சாலை, கன்னட சாலை, ராமச்சந்திரய்யா சாலை, 1வது மெயின் ரோடு. தெரு.

பல்லாவரம்:
கடப்பேரி பச்சைமலை ஹவுசிங் போர்டு, டிபி மருத்துவமனை, ஜிஎஸ்டி சாலை, ஜிஎச் நியூ காலனி 13-14, 17வது குறுக்குத் தெரு, மல்லிகா நகர், விபி வைத்தியலிங்கம் சாலை, கட்டபொம்மன் நகர், ஆர்கேவி அவென்யூ, திருமுருகன் நகர், மாணிக்கம் நகர், வேல்ஸ் கல்லூரி மெயின் ரோடு, பங்காரு நகர்.

தரமணி:
அதிபதி மருத்துவமனை, சிடிஎஸ் குடியிருப்பு (கிரியாஸ் அருகில்), தரமணி மெயின் ரோடு, டாடா கன்சல்டன்சி, ராமகிரி நகர், பேபி நகர் பகுதி, சாஸ்திரி நகர், பார்க் அவென்யூ.