Chennai Power Cut: சென்னை மாநகராட்சியில், நாளை பிப்ரவரி 13ஆம் தேதி, பல பகுதிகளில் மின் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மின்சாரம் வழங்குவதில், எவ்வித தடையும் இருக்கக் கூடாது என , மாநகராட்சியானது பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது வழக்கம். இதன் மூலம், மின் கசிவு உள்ளிட்ட பிரச்னைகள் , எதிர்காலத்தில் நிகழாமல் சரி செய்யப்படும்.  இந்நிலையில், நாளை எந்த இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டிருக்கிறது என பார்ப்போம். 

சென்னையில் நாளை மின்தடை

இந்நிலையில், சென்னையில் மாநகராட்சியில் நாளை பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடையானது செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இதனால், சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலான கால அளவில் மின்சாரமானது  இருக்காது.

Also Read:Deepseek AI: ஷாக்கில் டிரம்ப்! வரி நெருக்கடிக்கு டீப்சிக் ஆயுதத்தை எடுத்த சீனா! ஒரே நாளில் ரூ5 லட்சம் கோடி நஷ்டம்

சென்னையில் மின்தடை பகுதிகள்:

போரூர்

ஐயப்பன்தாங்கல், ஆர்.ஆர்.என்ஜிஆர், காட்டுப்பாக்கம், புஷ்பா என்ஜிஆர், வேணுகோபால் என்ஜிஆர், அன்னை இந்திரா என்ஜிஆர், வளசரவாக்கத்தின் ஒரு பகுதி, போரூர் கிஆர்டிஎன் முதல் மற்றும் இரண்டாம் கட்டம், ராமசாமி என்ஜிஆர், அர்பன் ட்ரீ, ஆற்காடு சாலையின் ஒரு பகுதி, எம்.எம். எஸ்டேட், சின்ன போரூர். 

முகப்பேர் மேற்கு:

இளங்கோநகர், மூர்த்திநகர், ஆபீசர்ஸ் காலனி, சக்திநகர் சத்தியவதிநகர் மற்றும் அக்ஷயா காலனி

Also Read: Realme P3: ரியல்மி பி3 ப்ரோ வெளியாகும் தேதி அறிவிப்பு: இந்த வசதியை கொண்ட முதல் மொபைல்!