Chennai Power Shutdown: சென்னையில்  மாத பராமரிப்பு பணி காரணமாக நகரின் சில இடங்களில் மாதம் ஒரு முறை அரை நாள்  மின் தடை செய்யப்படுவது வழக்கம். மக்களுக்கு தடையின்றி மின்சாரம் தருவதை உறுதி செய்யும் வகையில்  தமிழ்நாடு மின்சார வாரியம் மாதந்தோறும் இந்த மின் தடையை செய்து பராமரிப்பு பணிகள் செய்து சீரான மின் விநியோகத்திற்கு வழிவகுத்து  வருகிறது. 

Continues below advertisement

சென்னையில் நாளை மின்தடை: 29.05.2025

இந்நிலையில், நாளை(27.05.2025) சென்னையில் மாநகராட்சியில்  பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடை செய்யப்படும் எனற  அறிவிப்பை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

இதனால், பராமரிப்பு பணிகளுக்காக செவ்வாய்கிழமை (29.05.2025) காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

குன்றத்தூர்: நடைபாதை தெரு, தட்சர் தெரு, கன்னியப்பன் நகர், பொன்னியம்மன் நகர், திருவள்ளுவர் தெரு, சின்ன தெரு, பெரிய தெரு, நவீதர் தெரு, துரைசாமி முதலியார் தெரு, லட்சுமி நகர், மோகன்லிங்கா நகர்.

திருவேற்காடு: கூட்டுறவு நகர், கஜேந்திரன் தெரு, மாதிராவேடு, காவேரி நகர், வேலப்பஞ்சாவடி பி.எச்.ரோடு.

ஜேஜே நகர்: அம்பேத்கர் நகர், 17வது மற்றும் 18வது குறுக்குத் தெரு, 9வது பிரதான சாலை, SBIOA பள்ளி 6வது பிரதான சாலை, எரி ஸ்கீம் 2வது பிரதான சாலை, வினோத் அபார்ட்மென்ட்ஸ், கங்கையம்மன் நகர், KGYESS அபூர்வா அபார்ட்மென்ட், கோல்டன் ஹோம்ஸ், ஜெம்ஸ் பார்க்.

ஆவடி: திருமலைவாசன் நகர், அசோக் நகர், பூம்புழில் நகர், கன்னடபாளையம், திருமுல்லைவாயல் சாலை, ராமகிருஷ்ணா நகர், பாரதி நகர்.

புதுத்தாங்கல்: பெரியார் நகர், தேவராஜ் பிள்ளை தெரு, வி.ஜி.என்., நித்யானந்தம் நகர், பெருமாள் கோயில் தெரு, ஜிஎஸ்டி சாலையின் ஒரு பகுதி, இரும்புலியூர் சர்வீஸ் ரோடு .

சென்னையில் மின்தடை நேரம்?

இந்த பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளதாக தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் பராமரிப்பு பணிகள் பிற்பகல் 02.00 மணிக்க்கும் நிறைவு பெற்றால் மின்  விநியோகம் வழங்கபப்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள், தங்களது முக்கிய பணிகளை  முன்கூட்டியே திட்டமிட்டு முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.