Chennai Power Shutdown: சென்னையில், பிப்ரவரி 23ஆம் தேதி , எந்தெந்த இடங்களில் மின்தடை செய்யப்படும் என்பது குறித்து பார்ப்போம். மின்சாரம் வழங்குவதில், எவ்வித தடையும் இருக்கக் கூடாது என , அவ்வப்போது சில இடங்களில் மின்பராமரிப்பு பணிகளை, மின்வாரியம் மேற்கொள்வது வழக்கம். இதனால், எதிர்காலத்தில் மின்கசிவு உள்ளிட்ட மிகப்பெரிய பிரச்னைகள், ஏற்படாதவாறு முனனரே சரி செய்யப்படும்.
சென்னையில் நாளை மின்தடை: 23-02-2025
இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் மின்பராமரிப்பு பணி காரணமாக, கடப்பேரி பகுதிக்குட்பட்ட மெப்ஸ் கேம்பஸ் பகுதியில் மின்தடையானது செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனால், நாளை ( பிப்.23 -ஞாயிறு ) காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரையிலான கால அளவில் மின்சாரமானது இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணி:
தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மின்சார துறை சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை சென்னை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளன.
மின் தடை வழங்கப்படும் நாளில், பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
இதனால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள், நாளை செய்யக்கூடிய தங்களது முக்கிய வேலைகளை திட்டமிட்டு கொள்ளுங்கள்.