சென்னை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( மே 30, 2026, சனிக்கிழமை) மின்சார பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

Continues below advertisement

மாதாந்திர பராமரிப்புப் பணிகள்

தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Continues below advertisement

மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:

திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள  இந்திரா நகர், குரு நகர், விவேகநாத நகர், பழந்தண்டலம், நாகன் தெரு மற்றும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

மின்தடை நேரத்தில் தகவல்களைப் பெறுதல்

மின்தடை காலங்களில் அவசர அறிவிப்புகள் மற்றும் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை குறித்த துல்லியமான தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். குடியிருப்போர் இத்தகைய சூழல்களில் செய்திகளைத் தெரிந்துகொள்ள பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களைப் பயன்படுத்த வேண்டும்.

மொபைல் பேட்டரியைப் பாதுகாக்கும் வழிமுறைகள்

மின்தடை நீடிக்கும் பட்சத்தில் மொபைல் போனின் பேட்டரி ஆயுளைப் பாதுகாப்பது அவசியமாகிறது. இதற்காக போனில் உள்ள பவர் சேவிங் மோடினை (Power Saving Mode) உடனடியாக இயக்கி வைப்பது பேட்டரி வீணாவதைத் தடுக்கும்.

அத்தியாவசியப் பயன்பாடுகள் மற்றும் எச்சரிக்கை

மின்சாரம் இல்லாத நேரத்தில் மொபைல் போன்களை தேவையற்ற பொழுதுபோக்கு அம்சங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது. போனின் சார்ஜை நீண்ட நேரம் தக்கவைக்க, அவசர அழைப்புகள் மற்றும் மிக முக்கியமான குறுந்தகவல்கள் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே போனைப் பயன்படுத்த வேண்டும்.