சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை(25.07.2026) எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஜூலை 25-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போரூர்

  • குமணஞ்சாவடி
  • பெரியார் நகர்
  • எஸ்.வி.நகர்
  • கண்ணகி நகர்
  • பவித்ரா நகர்
  • சுகுந்தலா நகர்
  • ஜீவன் பிரகாஷ் நகர்
  • வி.ஜி.என். நகர்
  • சாந்தி நகர்
  • அட்கோ நகர்

தாம்பரம்

  • எம்ஆர்எம் தெரு
  • ராஜாஜி சாலை
  • வெங்கடேசன் தெரு
  • சண்முகம் சாலை
  • சிவசண்முகம் தெரு
  • அப்துல் ரசாக் தெரு
  • போலீஸ் குடியிருப்பு
  • ஜிஎஸ்டி சாலை
  • துரைசாமி ரெட்டி தெரு
  • எம்.கே.ரெட்டி தெரு
  • பக்தவச்சலம் தெரு

மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Continues below advertisement