சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், செப்டம்பர் 24-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செம்பியம்
- உமா நகர்
- முத்தமிழ் நகர் 1 முதல் 8-வது பிளாக்
- எஸ்பிஓஏ டீச்சர்ஸ் காலனி
- செக்ரிட்ரேட் தெரு
- அக்பர் நகர்
- மாதவன் நகர்
- பிஆர்எச் சாலை
- பரிமேகம் நகர்
- சுதா நகர்
- விக்னேஷ் நகர்
- விநாயகர் நகர்
- பால விநாயகர் கோவில் தெரு
- பெருமாள் கோவில் தெரு
- பச்சையப்பன் காலனி
- காமராஜர் நகர்
- ரெட்ஹில்ஸ் ரோடு
- மாடத் தெரு
- பஜனை கோவில் தெரு
- பள்ளி சாலை
- கிரிஜா நகர்
- எம்.என் நகர்
- சன்னதி தெரு
- சன்னதி தெரு
- சிட்டிபாபு நகர்
- கக்கன்ஜி காலனி
- ராஜா தெரு
- கபிலர் தெரு
- சத்தியவாணி முத்து நகர்
- கருணாநிதி சாலை
- எம்.பி.எம் தெரு
- நாகை அம்மையார் தெரு
- ராஜாஜி தெரு
மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.