சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை(09.06.2026) எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஜூன் 9-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவூர்
மூகாம்பிகை நகர், குன்றத்தூர் மெயின் ரோடு, ராம் நகர், குமரன் நகர், பெரியபனிச்சேரி, தண்டலம் மெயின் ரோடு, பாபு கார்டன், இரண்டம்கட்டளை, சிக்கராயபுரம் கொல்லச்சேரி.
பல்லாவரம்
கணபதிபுரம், விஸ்வகர்மா நகர், நாயுடு கடை வீதி, ஸ்கைபார்க், சர்ச் சாலை, டிவிஎஸ் குடியிருப்புகள், அக்னி குடியிருப்புகள், பஞ்சாயத்து காலனி, சுகுணா காலனி, நடேசன் நகர்.
காரம்பாக்கம்
வானகரம், பி.எச். ரோடு, சிவபூதம், ராஜீவ் நகர், கந்தமாபுரம், வானகரம் சர்வீஸ் சாலை, செட்டியார் அகரம், ஐ.சி.எல்., நூம்பல், அக்னி ஃபேரி லேண்ட், மூர்த்தி நகர், லட்சுமி நகர், இந்திரா நகர், போரூர் கார்டன் ஃபேஸ் 1 மற்றும் 2, ராமசாமி நகர், ஆண்டாள் நகர், ஷேக்மணியம், மெட்ரோ நகர், மகரிஷி டீச்சர்ஸ் காலனி, சமயபுரம், காவேரி நகர், பாரதி சாலை, தர்மராஜா நகர், அருணாசலம் நகர், மோதி நகர், வெங்கடேஸ்வரா நகர்.
திருவேற்காடு
வேலப்பன்சாவடி, மாதர்வேடு, பெருமாள் கோயில் தெரு, பத்மாவதி நகர், கூட்டுறவு நகர்.
மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
